tag:blogger.com,1999:blog-33535197736262947572024-03-19T00:21:29.470-07:00பிரியாணிசமைக்க தான் முடியல, எழுதவாச்சும் செய்யலாமே!நாஸியாhttp://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-3353519773626294757.post-20139671421517802352011-02-02T03:04:00.000-08:002011-02-02T03:04:19.920-08:00பிரியாணி சட்டி 02.02.2011<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">ஹலோ எவிரிபடி! எல்லாரும் நல்லா இருக்கீங்களா? பார்த்து ரொம்ப நாளாச்சு... :) நிறைய சோம்பலும், கொஞ்சம் வேலைகளும் இருந்ததால பிரியாணி சட்டிய திறக்க கேப் விட்டுடுச்சு..<br />
<br />
***<br />
இறைவன் அருளால் ஒரு பாஸ்போர்ட்டோட ஊருக்கு போயி, இரண்டு பாஸ்போர்ட்டோட வந்து சேர்ந்தாச்சு. (வந்து சேர்ந்து மூணு மாசம் ஆவுது-எல்லாம் ஒரு சோம்பல் தான்) குட்டியோடவே இப்ப நேரம் சரியா இருக்கு. வயித்து புள்ளையோட எங்க வேணும்னாலும் போகலாம், கைப்புள்ளையோட பக்கத்துல போகக்கூட கஷ்டம்னு பெரியவங்க சொன்னது சரியாத்தான் இருக்கு. ஸ்கூல்ல, காலேஜுல, ஏன் ஆஃபீஸ் ல கூட அப்பப்பா டகால்டி வேலை செஞ்சு கட் அடிக்கலாம், ஆனா நம்ம ஜூனியர் கிட்ட ஒண்ணும் நடக்க மாட்டேங்குது. நானும் பையன் அவங்க வாப்பா மாதிரி சமர்த்தா வரனும்னு துவா கேட்டுட்டே இருந்தேன்.. ஆனா பாக்கத்தான் வாப்பா மாதிரி, ஆக்டிவிட்டீஸ் எல்லாம் ம்மா மாதிரின்னு மாப்பு சொல்றாங்கப்பா!<br />
<br />
***<br />
<br />
இங்க என் சமையல சகிக்காம காய்ஞ்சு போயி, அங்க வீட்டுக்கு போனா, அங்கயும் போய் ரொம்ப ஃபீல் பண்ணினேன். எங்க மாப்புக்காக.. பின்ன, இத்தனை நாளா இது தான் மீன் ஆனம், இது தான் கறி ஆனம்னு சொல்லி அவங்கள ஏமாத்திட்டோமேன்னு தான்.<br />
***<br />
<br />
ஊருக்கு போறதுக்கு ஜாலியா இருந்தாலும் கர்ப்பமா இருக்கும்போது எல்லாரும் பயப்படுறது அட்வைஸுக்கு தான். நின்டா, நடந்தா, உட்கார்ந்தா, தூங்கினா, எல்லாத்துக்கும் ஒரு மெத்டலாஜி வெச்சிருப்பாங்க. பல விஷயங்களில் நமக்கு நன்மை இருந்தாலும் ஒரு சில விஷயங்கள் நம்மளால பண்ணவே முடியாது. உதாரணத்துக்கு தூங்கும்போது திரும்பி படுக்கனும் என்றால் எந்திச்சு உட்கார்ந்து தான் படுக்கனுமாம். இல்லன்டா புள்ளை குடலை சுத்திக்குமாம். இப்படி யாராச்சும் அட்வைஸ் பண்ணினா, நான், ஆமாமா, அப்படித்தான் செய்றேன்னு சொல்லிடுவேன். வேற வழியில்லையே! <br />
***<br />
<br />
<br />
<span style="font-size: small;">என்ன்ன தான் நம்ம மெட்ராஸ், நம்ம சென்னைன்னு வாய்கிழிய சப்போர்ட் பண்ணினாலும், ஒரு விஷயத்துல நம்ம ஊரு பயங்கரமா அடி வாங்கும். அது கூவாருன்னு நீங்க நினைசீங்கன்னா அது தப்பு. அது நம்ம ஊரு ஆட்டோ டிரைவர்கள் தாங்க. சே! ஒரு பக்கம் அநியாய கொள்ளைன்னா, இன்னொரு பக்கம் பொறுப்பில்லாம ஓட்டுறது. எப்ப ஆட்டோவில ஏறினாலும், வயிதுமேல கைய வெச்சிட்டு, கொஞ்சம் மெதுவா ஓட்டுங்க சார்ன்னு சொல்லிட்டே தான் ஏறுவேன். ஆனா கேட்டா தானே? ஒரு தடவை ஸ்பென்சர் சிக்னல் கிட்ட, மெயின் ரோடுல இருந்து அப்படியே சர்வீஸ் லேனுக்கு ஒரு ஆட்டோவை எதிட்டாருன்னா பாத்துக்கோங்க. இப்ப நினைச்சாலும் கடுப்பா இருக்கு. ஆனா பாருங்க, டாக்டர் குறிச்ச பிரசவ நாள் தாண்டியும் புள்ளை வெளிய வர மாற்றுக்குன்னு தெரிஞ்சதும் ஆட்டோவுல இன்னும் நல்லா ரவுண்டு அடிக்கலாம்னு தோணிச்சி.. ஹிஹி.. </span><br />
<br />
***<br />
<br />
எப்படியோ, நல்லபடியா எங்களுக்கு ஒரு குட்டிபாப்பா வந்துட்டான்.. அல்ஹம்துலில்லாஹ்.. சார் தூங்குற டைம் தான் நம்ம வேலைய பாக்க முடியும்.. அதான் உங்களை எல்லாம் பாத்துட்டு போகலாம்னு வந்தேன்! <br />
<br />
<br />
</div>நாஸியாhttp://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.com25tag:blogger.com,1999:blog-3353519773626294757.post-57499197264836122272010-05-15T03:01:00.000-07:002010-05-15T03:06:20.786-07:00முஸ்லிம் பெண்கள் சம்பாத்தியம்!சகோதரி சந்தனமுல்லை அவர்கள் முஸ்லிம் பெண்கள் சம்பாதிப்பது ஹராமா என்று ஒரு இடுகையெழுதி அதைப்பற்றி என்னுடைய கருத்தையும் (நம்மளையும் மதிச்சு!!) எழுத சொல்லிருந்தாங்க. நானே எழுதனும்னு நினைச்சிட்டு இருந்தேன், ஆனா எப்பவும் போல என்னுடைய சோம்பல் முடக்கிட்டு. இப்ப நல்லவேளை சகோதரி எழுத சொன்னாங்க. அதனால, சுடச்சுட இந்த பதிவு.<br />
<br />
<br />
**<br />
முதல்ல ஒரு விஷயம். இஸ்லாத்தை போலவும், நபி சல் அவர்களைப்போலவும் அதிகமான அளவு விமர்சனத்துக்குள்ளான விஷயங்கள் எதுவுமே இல்லைன்னு நினைக்குறேன். முஸ்லிம்கள் எது செய்தாலும் அது விவாதிக்கப்பட வேண்டிய விஷயமாகவே மீடியாக்கள் சித்தரிக்கின்றன என்பது என்னுடைய கருத்து. அதுவும் பெண்கள் விஷயத்தில் பாரபட்சமாகவே நடக்குதுன்னு நாம கண் முன்ன பார்க்கிற விஷயம்.<br />
<br />
சரி, விஷயத்துக்கு வருவோம். தாருல் உலூம் என்ற இஸ்லாமிய அமைப்பு, கொஞ்ச நாள் முன்ன 'முஸ்லிம் பெண்கள் வேலைக்கு செல்வது ஹராம்' அப்படின்னு ஒரு ஃபத்வா சொன்னதாக எங்க பார்த்தாலும் செய்தி பரவி கிடந்தது. முஸ்லிம் பெண்கள் படிப்பதோ, வேலைக்கு செல்வதோ எந்த இடத்துலயும் ஹராம் என்று சொல்லப்படாதபோது எப்படி இப்படி ஒரு ஃபத்வா வந்துச்சுன்னு ஒரே குழப்பம். பிறகு பார்த்தா தான் தெரியுது, இதுவும் மீடியாக்களின் கைங்கரியம் தான். சமீபமாக வந்த செய்திகளில் அப்படி ஒரு <a href="http://beta.thehindu.com/news/national/article428615.ece">'ஃபத்வாவை சொல்லவில்லை, பெண்கள் வேலை செய்யுமிடத்தில் பேண வேண்டிய ஹிஜாபை பற்றித்தான் சொல்லிருந்தோம்'</a> என்று மறுப்பு தெரிவிச்சிருக்காங்க.<br />
<br />
<br />
**<br />
<br />
சரி. இப்ப முஸ்லிம் பெண்கள் வேலைக்கு செல்லலாமா? செல்லக்கூடாதா? இஸ்லாம் இதைப்பத்தி என்ன சொல்லுது?<br />
<br />
<br />
ஒருத்தர் முஸ்லிம் என்று சொன்னால் அவர் எல்லாம் வல்ல இறைவனுக்கு முற்றிலும் அடிபணிந்தவராவார். ஆங்கிலத்துல சொல்லனும்னா 'டோட்டல் சப்மிஷன் டு அல்லாஹ்'. இதில் நம்ம வாழ்க்கையோட ஒவ்வொரு செயல்களுமே இறைவணக்கம் தான். காலையில தூங்கி எழுவதிலிருந்து, இரவு தூங்க செல்லும் வரை பல் துலக்குவதிலிருந்து சாப்பிட்ட பிறகு கை கழுவுவது வரை, வியாபாரம் செய்வதில் இருந்து ஒருத்தர் வீட்டு விருந்துக்கு நாம போன நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் வரை நாம செய்யக்கூடிய பல விஷயங்களை எப்படி ஒழுங்கோட செய்வதுன்னு இஸ்லாத்தில் நமக்கு கட்டளை/அறிவுரை இருக்கு. வெளிய இருந்து பார்க்கும்போது இது ரொம்ப பிற்போக்குத்தனமா தெரியலாம். ஆனா 1400 வருஷங்களாக இறைத்தூதர் முஹம்மது நபி (சல்) அவர்களை பின்பற்றுவதில் இன்றிருக்கும் கோடிக்கணக்கான முஸ்லிம்களுக்கு எந்த சிரமமும் இல்லை. <br />
<br />
<br />
அப்படி, ஆண்கள், பெண்கள் என சேர்த்தியாகவும், தனித்தனியாகவும் மனிதர்களுக்கு பல கட்டுபாடுகள் இஸ்லாத்தில் இருக்கு. <br />
<br />
<br />
ஒரு குடும்பம் என்றால், அதில் தாய்,தகப்பனுக்கும், பிள்ளைகளுக்கும் பல கடமைகள் இருக்கு. இஸ்லாத்தில் என்னதான் மனைவி பணக்காரியாக இருந்தாலும், சம்பாதிப்பவளாக இருந்தாலும், குடும்பத்தின் பராமரிப்புக்கு சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் கணவனுக்கு மட்டுமே இருக்கு. மனைவி தான் சம்பாதிக்கிறாளேன்னு கணவன் ஜாலியா இருக்க முடியாது. அதே போல, மனைவி சம்பாதிப்பதில் அவள் குடும்பத்திற்கு செலவு செய்ய கடமை இல்லை. <br />
அதாவது, ஒரு குடும்பத்தில கணவன், மனைவி இருவரும் சம்பாதிச்சாலும், மனைவிக்கு குடும்பத்துக்காக செலவு செய்யனும்கிற அவசியமே இல்லை. அப்படிக்கட்டாயப்படுத்த கணவனுக்கோ, இல்லை அவள் தகப்பனுக்கோ, பிள்ளைகளுக்கோ இன்னும் வேறு யாருக்குமே உரிமை இல்லை. <br />
<br />
இப்படி ஒரு கட்டளை இருக்கும்போதே நாம தெரிஞ்சுக்கலாம், பெண்கள் வேலைக்கு போவதையும், சம்பாதிப்பதையும் இஸ்லாம் எந்த விதத்திலும் தடுக்கவில்லை. இன்னும் சொல்லப்போனா இப்படி ஒரு கட்டளை தான் எனக்கு கண்டிப்பா சம்பாதிக்கனும்கிற ஆசைய தூண்டிச்சே. பின்ன, நாம சம்பாதிச்சத நம்ம இஷ்டப்படி செலவு செய்யலாம்தானே? (ஆனா அதை நேர்வழியில் செலவு செய்வது முக்கியம். ஏன்னா அதைத்தந்த இறைவனுக்கு நான் பதில் சொல்லனுமில்லையா?)<br />
<br />
சரி, அப்ப ஏன் பெண்கள் வேலைக்கு போறத பத்தி எந்த வித கட்டுப்பாடும் இல்லையா? இருக்கு. எப்படி ஒரு ஆணுக்கு குடும்பத்திற்க்காக சம்பாதிப்பது கடைமயோ, அதே போல ஒரு பெண்ணுக்கு குடும்பத்தை பார்த்துக்கொள்வது கடமையாகிறது. இரண்டையும் சமாளிக்க முடியும்னா தாராளமா வேலைக்கு போகலம். <br />
<br />
உடனே, பெண்கள் என்றால் சமையல் கட்டுதானா, அப்படித்தானா இப்படித்தானா என்று குதிப்போம். நமக்கு சமையல் போர் என்றால், அதே போல எத்தனை ஆண்கள் சம்பாதிச்சு தான் ஆக வேண்டும் என்று பிடிக்காத வேலையைக்கூட குடும்பத்திற்க்காக கஷப்படுறாங்க? துபாய் மாதிரி வளைகுடா நாடுகள்ல வீட்டு சாப்பாடு கூட கிடைக்காம அவங்க குடும்பம் நல்லா இருக்கனும் என்று எவ்வள்வு கஷ்டப்படுறாங்க? அதை பார்க்கும்போது வீடும், சமையலும் ஒண்ணுமில்லைன்னு தான் நான் சொல்லுவேன். <br />
<br />
<br />
<br />
வேலை செய்யும் இடத்திலும் கண்டிப்பாக ஹிஜாபை பேண வேண்டும். நான் கேம்பஸ் இன்டர்வியூக்களுக்கு போகும்போது பலர் என்னிடம் கேட்டது, 'ஹிஜாப் போடக்கூடாதுன்னு சொன்னா என்னடீ பண்ணுவே?' 'அப்படிப்பட்ட வேலை எனக்கு தேவையில்லைன்னு சொல்லுவேன்'. ஏன்னா, வேலைன்னு வந்துட்டா, மண்டைக்குள்ள இருக்குறது தான் முக்கியமே ஒழிய, ஆடைக்குள்ள இருக்குறது இல்ல. <br />
<br />
<br />
<br />
அடுத்ததா, அளவுக்கதிகமான சோஷியலைசிங் இருக்கக்கூடாது. ஆண்களிடம் பேசும்போது நம்முடைய பேச்சு வெறும் வேலையை பற்றி மட்டும் இருக்க வேண்டுமே ஒழிய வீண் அரட்டைகளுக்கு நோ. நான் என் அலுவலகத்தில் சேர்ந்த புதிதில் அவுட்டிங்க் எல்லாம் எனக்கு வர விருப்பமில்லை என்று சொன்னேன். என்னை மதித்தார்கள். :) <br />
<br />
அதோட ரொம்ப முக்கியம், நம்முடைய கடமையான தொழுகையையும் பேண அனுமதிக்கனும். இது ஆண்களுக்கும் பொறுந்தும். நாம் இதை கேட்பது கொஞ்சம் ஓவர் தான். இருந்தாலும் சமாளிப்பது நம்முடைய கடமை. ஒரு நாளைக்கு எத்தனையோ டீ ப்ரேக் எடுக்கும்போது ஐந்து நிமிடங்கள் தொழுவதற்கு எடுப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை. இந்த விஷயத்தில் புத்திசாலித்தனமாக இருப்பது நம் கடமை<br />
<br />
<br />
என்னைப்பொறுத்த வரைக்கும், நான் இஸ்லாத்தின் எல்லைக்குள் என்னால் இயன்ற வரை நான் நினைத்ததை செய்துக்கொண்டு தான் இருக்கிறேன்.<br />
<br />
<br />
<br />
முன்பே சொன்னது போல, ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விஷயத்தில் எந்த சமரசமும் செய்துக்கொள்ள மாட்டார்கள். என்னைப்பொறுத்த வரைக்கும் இறைவன் எனக்கிட்ட கட்டளைகளை நான் எந்த விதத்திலும் காசு, பணத்துக்காக விட்டுக்கொடுக்க மாட்டேன். அதனால, என்னுடைய இத்தனை கட்டுபாடுகளையும் புரிந்துக்கொள்ளும் நிறுவனத்தில் சேர பொறுமையாகவே இருந்தேன். <br />
<br />
<br />
இப்பல்லாம் காலையில் ஒன்பது மணிக்கு போயி, ஐந்து மணிக்கு வீட்டுக்கு வரும் வேலை கிடைப்பது குதிரைக்கொம்பு. ஆனா, நாம நம்ம பாஸிடம் எடுத்து சொன்னால் கண்டிப்பாக புரிந்துக்கொள்வார்கள். வேலை அதிகமா இருந்தா வீட்டுக்கு போய் செய்ய சொல்லுவாங்க. என் விஷத்தில் இது நடந்திருக்கு. <br />
ஒரு குடும்பம் என்றால் அதில் கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் புரிந்துக்கொண்டு, ஒருத்தர் கடமைய இன்னொருத்தர் செய்ய உதவனும். இதற்கு அழகிய உதாரணம் இறைத்தூதர் முஹம்மது நபி சல் அவர்களுடைய மனைவிமார்களிடம் வீட்டு வேலைகளில் எவ்வளவு உதவியாக இருந்தார்கள் என்பது. வேலை செய்யலன்னா கூட வீட்டு வேலைகளில் உதவி செய்யும்போது வேலை செய்யும் மனைவிக்கு உறுதுணையாக இருப்பதுதான் ஒரு நல்ல கணவனின் அடையாளம்.<br />
<br />
வேலை செய்வது மட்டுமில்லாம சொத்துரிமை (குடும்பத்திற்காக செலவு செய்யும் கட்டாயம்/கடமை இல்லைன்னா கூட நமக்கெல்லாம் சொத்தில் பாதி பங்கு இருக்குங்கோவ்!), திருமணம், விவாகரத்து, இன்னும் பல விஷயங்களில் பெண்களுக்கு எத்தனையோ உரிமைகளும் சலுகைகளும் இஸ்லாத்தில் இருக்கு. இஸ்லாத்தை சரியா புரிந்துக்கொள்ளாதவர்களும், ஒழுங்கா கடைப்பிடிக்காதவர்களும் இஸ்லாத்தின் பேரால் செய்யும் தவறுகளுக்காக மீடியாக்களுக்கு தீனியாகின்றனர் என்பது தான் வருத்தம்.நாஸியாhttp://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.com64tag:blogger.com,1999:blog-3353519773626294757.post-90473606419803080872010-05-04T00:49:00.000-07:002010-05-04T00:49:56.280-07:00அகில உலக ஐக்கிய அரபு அமீரக பெண் பதிவர்கள் முன்னணி...அப்படி எதுவும் ஆரம்பிக்கலைங்க.. சும்மாத்தான் எல்லாரும் சந்திச்சோமே. சகோதரி ஸாதிகாவின் அமீரக விஜயத்தை ஒட்டி (பில்ட் அப் எப்பூடி) ஏற்பாடு செஞ்ச சந்திப்பு. எல்லாரும் சந்திப்போமான்னு ஹூசைனம்மா கேட்டவுடனேயே எனக்கு ஒரே சந்தோஷமா இருந்தது. எப்படியும் எல்லாரையும் பார்த்துடனும்னு எங்க மாப்பியை நச்சரிச்சு, ரெடியாகி கிளம்பி போனோம்.<br />
<br />
<br />
நிறைய பேர் பதிவுகள்ல பார்த்துருக்கேன். வலையுலகம் மூலமா கிடைக்கும் நல்ல விஷயம்னு சொல்ல சொன்னால், எல்லாரும் ஒட்டுமொத்தமா சொல்வது இங்கு கிடைக்கும் நல்ல நட்புக்களைத்தான்! நானும் ஆச்சரியப்படுவேன், அதெப்படி முகம் தெரியாத ஒருத்தவங்களோட சட்டுன்னு பழக முடியும்னு. ஆனா முதல் சந்திப்பிலேயே நீண்ட நாள் பழகின தோழிகள் போல எல்லாரும் கலகலவென்று இருந்தது எனக்கு இன்னும் மலைப்பா இருக்கு.<br />
<br />
<br />
வீட்டை விட்டு கிளம்பும்போதே நல்லா பசி.. இன்னைக்கு வெளிய சாப்பிடலாம்னு நைசா மாப்புக்கிட்ட அடி போட்டுட்டு எஸ்கேப். நானும் நினைச்சேன், என்ன ஒரு அரை மணி நேரம்தான் எல்லாரும் பார்த்துக்குவோம்னு. லுலுவில் ஹூசைனம்மாவை பார்த்தவுடன், அவங்களா இவங்கன்னு ஒரே ஆச்சரியம். அவ்வளவு சாதுவா இருந்தாங்கப்பா! ஜலீலாக்காவும் வந்த பிறகு பேசிட்டு அப்படியே பார்க்குக்கு நடை போட்டோம்.. உள்ள காலத்தான் எடுத்து வைக்கிறேன், ஸாதிகாக்கா 'ஆ பிரியாணி சட்டி'ன்னு ஜோரா ஒரு வரவேற்பு குடுத்தாங்க. அப்படியே மலீக்காக்கா எல்லாரையும் அறிமுகப்படுத்த, மலீக்காக்காவை பார்த்து நீங்க யாருன்னு கேக்க, ஹிஹி.. ஆஸியாக்காவோட சமையல் பக்கம் போயி நான் முதல் நாள் செஞ்ச சுருட்டு கறி எங்க மாப்பிக்கு ரொம்ப பிடிச்சிட்டு..<br />
<br />
ஜலீலாக்கா கொண்டுட்டு வந்த சூப்பர் மசால் வடைய முதல்ல போணி பண்ணினது நானே! மலீக்காகா டூடுல்ஸ் (கோதுமை தோசைக்குள்ள நூடுல்ஸ் ஸ்டஃபிங்க்: பேரு வெச்சிட்டோம்ல) சூப்பரா இருந்துச்சு.. நல்ல பசி வேற, செம்மையா சாப்பிட்டேன்! ஹிஹி...<br />
<br />
சகோதரிகள் ஸாதிகா, ஹூசைனம்மா, ஜலீலா, மலீக்கா, மலர், ஆஸியா இவங்களையெல்லாம் முதல்லயே தெரிஞ்சாலும், சந்திப்பின் மூலமா அறிமுகமான சகோதரிகள் மனோ மற்றும் அநன்யாவை சந்திச்சதில் ரொம்ப சந்தோஷம். சகோதரி மனோ அவங்ககிட்ட சரியா பேச முடியல. ஆனா ஜலீலாக்கா சொன்னாங்க, அவங்க ரொம்ப அருமையா எழுதுவாங்கன்னு. பிறகு தான் போயி பார்த்தேன்! அநன்யாவின் கொஞ்சும் தமிழ் ரொம்பவே நல்லா இருந்தது.. மலீக்காவின் மகன் மஃரூஃப் அப்படியே அம்மா சாடை.. ஜலீலாக்கவின் மகன் ஹனீஃபும் அப்படியே. மாஷா அல்லாஹ்.. பொறுமையான பிள்ளைகள். நேரம் ஆனதும் மாப்பு பார்க்குக்கு வந்துட்டாங்க, அப்படியே கிளம்புறேன்னு சொன்னதும், ஜலீலாக்கா எனக்குன்னு தனியா எடுத்து வெச்ச முர்தபாவும் மலீக்காகாவோட அன்பு பரிசாக எனக்கே பிடிச்ச பிங்க் கலர் பர்ஸும் தந்து அசத்திட்டாங்க. <br />
<br />
நான் வீட்ட பொறுத்த வரைக்கும் பெரிய சோம்பேறி. ம்மா வீட்டுல இருந்தா ஒரு வேலையும் செய்ய மாட்டேன், அதுவும் கிச்சன் பக்கமெல்லாம் நல்ல வாசனை வரும்போது எல்லாருக்கும் முன்னாடியே ம்மா செஞ்சதை ஆட்டைய போடத்தான் போகுறது. அப்படி இருக்கும்போது கல்யாணம் ஆகி இங்க தனியா வந்த பிறகு எப்படித்தான் சமாளிக்கப்போறேனோன்ற கவலை இருந்தது. <br />
<br />
இங்க வந்து பார்த்தா தான் தெரியுது, வேலைக்கும் போயிட்டு, பிள்ளைகளையும் பார்த்துட்டு, அட்டகாசமா சமையலும் செய்துட்டு, வேலைக்கு போனாலும் போகலைன்டாலும் கவிதைகள், அருமையான கட்டுரைகள், யோசிக்க வைக்கும் பல விஷயங்களை தங்கள் அனுபவம் மூலம் பகிர்ந்துட்டு இருக்கும் எல்லாரையும் பார்த்தப்போ எனக்கு அவங்கல்லாம் ஒரு இன்ஸ்பிரேஷனாகவே தெரிஞ்சாங்க. உண்மையா.<br />
<br />
அங்க சந்திச்சவங்கள்ல நான்தான் இளையவ. இன்னும் பெருசா பொறுப்புகள் எதுவும் வரலை. சாதரணமா செய்யக்கூடிய விஷயங்களையே செய்ய சடையும் ஆளு நான். ஆனா இவங்கல்லாம் நான் மலை போல நினைக்கும் பல வேலைகளை சாதரணமாக செய்யக்கூடியவங்க. எல்லாரும் நினைப்பது போல ஒரு பெண் சமையல் செய்வதும், பிள்ளைகளைகளையும், கணவரையும், அவர் குடும்பத்தையும், தன் குடும்பத்தையும் பார்த்துக்கொள்வது சாதரண விஷயம் கிடையாது. <br />
<br />
<br />
பெண்கள் நாங்கல்லாம் சேர்ந்து சந்திச்சதில் எல்லாருக்கும் சந்தோஷம்னா, எனக்கு அதுக்கூடவே நல்ல படிப்பினையும். ஒவ்வொருத்தவங்ககிட்ட இருந்தும் கத்துக்க நிறைய விஷயம் இருக்கு. உங்க எல்லாரையும் மீண்டும் சந்திக்க ஆவலா இருக்கேன், இன்ஷா அல்லாஹ்!நாஸியாhttp://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.com40tag:blogger.com,1999:blog-3353519773626294757.post-26064264906217312962010-04-13T05:46:00.000-07:002010-04-13T05:46:40.204-07:00ஈமான் என்னும் இறைநம்பிக்கை!அட, தொடர்ந்து மூணாவது பதிவும் தீபா அவர்களின் அழைப்பால்!! ஹிஹி.. <br />
<br />
<br />
***<br />
<br />
கொஞ்சம் சீரியஸாக, என்னுடைய நம்பிக்கை சார்ந்த விஷயங்களை பத்தி எழுதனும்.. நான் பதினாலு வருஷமும் படிச்சது முஸ்லிம்களால் நடத்தப்படும் பெண்கள் பள்ளியில், என் பிறந்த வீடும் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் தான்.. ஆனா எங்க வீட்டுல மட்டும் ஒரு ஸ்பெஷல்.. கீழ் விட்டில் வட இந்தியர்களும், முதல் மாடியில் கேரளத்தை சேர்ந்தவங்களும் இருந்தாங்க.. மார்வாடிகளோட அதிகம் பழக்கமில்லைன்டாலும் கேரளாக்காரங்களோட எங்களுக்கு நல்ல பழக்கம் இருந்தது.. அந்த அங்கிளும் ஆன்ட்டியும் எங்கும்மா மேல உயிரா இருப்பாங்க.. ஆனா என் வயசில யாருமே இல்லை.. அதனால விளையாட்டெல்லாம் தம்பி, மாமி, சாச்சாமார் மக்களோடத்தான்.. <br />
<br />
<br />
பள்ளியிலயும் இரண்டு, மூன்று மாணவிகளைத்தவிற மாற்று மதத்தை சேர்ந்தவங்க கிடையாது.. இப்படி இருந்த எனக்கு எங்க கம்மா (பாட்டி) வீடு ஒரு தனி உலகம்.. அவங்க அப்போ பொன்னேரியில இருந்தாங்க.. அங்க ஒரு காலனி மாதிரி இடம்... அங்க நாங்க மட்டும்தான் முஸ்லிம்.. இதுல காமெடி என்னன்னா, என் பேரே பாதி பேரு வாய்ல நுழையாது.. என்னை சின்ன வயசிலேயே பாயம்மான்னு கூப்டு கிண்டல் பண்ணுவாங்க.. ஹிஹி.. <br />
<br />
<br />
அங்க ஒரு பாம்பு புத்து இருந்தது.. அதை சுத்தி சுவர் எழுப்பி அதை ஒரு வழிபாட்டு தலம் மாதிரி கட்டியிருந்தாங்க.. நாங்க வாண்டுகள்லாம் அங்க தான் போயி விளையாடுவோமே.. முக்கியமா சொப்பு சாமான் விளையாட ஏத்த இடம் அது தான்.. ஒரு போதும் எங்க கம்மாவோ, எங்கும்மாவோ அங்கல்லாம் போகக்கூடாதுன்னு என்னை தடுத்ததும் இல்ல, என்னை அங்க சேர்த்துக்க கூடாதுன்னு மத்தவங்க யாரும் சொன்னதும் இல்லை.. என்ன, அவங்க அந்த புத்தை கும்பிடுவாங்க, நாம அதை செய்யக்கூடாதுங்குறது மட்டும் எனக்கு தெரிஞ்சிது.<br />
<br />
அதே காலனியில தான் முதன் முதல்ல எனக்கு கிறிஸ்தவர்கள் அறிமுகமும் கிடைச்சது.. அங்க கிறிஸ்துமஸ் அப்போ மரத்தை அழகா அலங்கரிச்சுருப்பாங்க..எங்க வயசு பிள்ளைங்க யாரும் அங்க இல்லன்டா கூட சும்மாவாச்சும் நாங்கல்லாம் அவங்க வீட்டுக்கு போவோம்.. <br />
இப்படித்தான் மாற்று மதத்தவர்களைப் பத்தின விவரம் எனக்கு சின்ன வயசில தெரிஞ்சது... எங்க வீட்ட பொறுத்தவரைக்கும் முஸ்லிம்கள்னா ஆண்கள் தொப்பி போடுவாங்க, பெண்கள் தலையிலயும் சீலை போடுவாங்க, பெருநாள் கொண்டாடுவோம் (அப்பமும் என்ன, பெருநா காசும் பிரியாணியும் தான்), கல்யாணம் இல்ல கடை திறக்கனும்னா ஃபாத்தியா ஓதுவாங்க.. அவ்வள்வு தான்.. <br />
<br />
எங்க கம்மா (அம்மாவின் அம்மா) வீட்டுல தொழுகை எல்லாம் பார்க்க முடியும்.. ஆனா அவங்களும் சரியான தர்கா பார்ட்டி.. அதாவது ஒரு மனிதரின் அடக்கஸ்தலத்துக்கு பச்சை போர்வை போட்டு அங்க ஒரு தாத்தா மயிலிறகுல செஞ்ச துடைப்பத்தால நம்ம முகத்த பெருக்கி விடுவாரு.. அதுக்கு பேரு தான் தர்கா.. வெள்ளிக்கிழமையானா தவறாம எங்க கம்மா என்னை அங்க கூட்டிட்டு போயிடுவாங்க.. நானும் அங்க இருக்குற குட்டி குட்டி தவளைங்கள பாக்க ஆசையா போவேன்.. (கூடவே பூந்திக்காகவும்.. ஹிஹி).. ஆனா இதெல்லாம் தவறுங்கறது கொஞ்ச லேட்டாதான் தெரிஞ்சது..<br />
<br />
அந்த வயச பொறுத்த வரைக்கும் நாம அல்லாஹ் ஒருவனைத்தான் வணங்க வேண்டும் என்பது எப்படியோ ஓரளவுக்கு எங்க பள்ளியில சொல்லிக்கொடுத்த வரைக்கும் தெரியும்... அது போல மாற்று மத நண்பர்கள் "உங்க அல்லாஹ் எப்படி இருப்பாரு"ன்னு கேட்டா "அல்லாஹ்வை நாம பாக்க முடியாது, ஒரு நபி (மூஸா/மோசஸ்) அல்லாஹ்வை பாக்கனும்னு கேட்டப்போ அல்லாஹ்வோடைய ஒளி மட்டும் பட்டு ஒரு மலையே தூள் தூள் ஆயிடுச்சாம்" ங்கற அளவுக்கு தான் தெரியும்..<br />
<br />
<br />
நான் ஆறாவது படிக்கும்போது எக்ஸ்கர்ஷனுக்கு போகனும், திங்க எதாச்சும் வாங்கி குடுங்க வாப்பான்னு கேட்டப்போ என்னை வெளிய கூட்டிட்டு போனாங்க.. போகும்போது வாப்பா, "நாம யார வணங்கனும்?" அப்படின்னு கேட்டாங்க.. நானும் "அல்லாஹ்வைத்தான் வணங்கனும்"னு சொன்னேன்.. "அப்போ, அந்த தர்காவில யாரோ ஒரு மனிதரைத்தானே அடக்கம் செஞ்சிருக்கு, அப்ப ஏன் அதுகிட்ட போயி எனக்கு அது செய், இது செய்னு கேக்குறீங்க"ன்னு வாப்பா கேட்டதும் தான் நான் யோசனை பண்ணினேன்.. <br />
<br />
அதே கேள்விய எங்க கம்மாகிட்ட கேட்டப்போ அவங்க எனக்கு சரியா பதில் சொல்லலை.. எப்படியோ இறைவன் அருளால் இஸ்லாமிய கல்வி மூலமா இஸ்லாத்தில் இடைத்தரகர்கள் கிடையவே கிடையாது, இறைவனுக்கு இணை வைத்தல் மிகப்பெரிய பாவம்னு விளங்கியது...<br />
<br />
குரானை அரபியில சரியான உச்சரிப்போட ஓதவும், ஓரளவுக்கு இஸ்லாத்தை பத்தியும் தெரிஞ்சுக்க என் பள்ளி மிகவும் உதவியது... அது போல பள்ளி இறுதி நாட்கள்ல நானே குரானை தமிழாக்கத்தோடு படிக்கத்தொடங்கினேன்.. அப்பத்தான் தெரிஞ்சது, எவ்வளவு பெரிய அற்புதத்தை நம்ம கையில வெச்சிருக்கொம்னு.. <br />
<br />
கல்லூரிக்கு போனதும்தான் "ஆமா, நீ ஏன் இந்த முக்காடு போடுற"ன்னு ஒவ்வொருத்தரா கேக்க ஆரம்பிச்சாங்க.. ஒரு சிலர் ஒரு மாதிரி இரக்கத்தோடும் ஒரு சிலர் கிண்டலாகவும் கேப்பாங்க..<br />
<br />
என்னுடைய இறைநம்பிக்கையும், இஸ்லாத்தை பத்தின அறிவும் வளர ஆரம்பிச்சது இப்படிப்பட்ட கேள்விகளை எதிர்கொள்ள ஆரம்பிச்ச பிறகு தான்.. மேலாண்மை படிக்கும்போது அங்குள்ள விடுதி மெஸ்ல போடுற கோழிக்கறி ஹலால் கிடையாது, அதனால அங்க நான் கிட்டத்தட்ட ஒரு வெஜிடேரியன்.. நண்பர்களெல்லாம் ஏன்னு கேக்குறப்போ, ஹலால்னா என்னன்னு விளக்குவேன்.. அதே மாதிரி ஏதாச்சும் நல்ல உடை போட்டுட்டு, வெளிய கிளம்பும்போது நான் துப்பட்டாவைக்கொண்டு முழுசா மறைச்சதும் 'ஏன்டி, இவ்வளவு நல்ல ட்ரெஸ் போட்டுட்டு இப்படி மறைக்கிற'ன்னு கேப்பாங்க.. நல்லா ட்ரெஸ் பண்ணிக்கிறது எனக்காக தான்டி, ரோட்ல போறவங்களுக்காக இல்லன்னு ஒவ்வொரு தடவையும் விளக்கனும்.. ஹிஹி... <br />
<br />
<br />
<br />
அதே போல நான் நிதி நிர்வாகவியல்ல (அதாம்பா ஃபைனான்ஸ்) சேர்ந்ததும் வட்டி என்பது இஸ்லாத்தில் மிகப்பெரிய பாவங்களில் ஒன்று, அதற்கு மாற்றாக இஸ்லாமிய வங்கிமுறை பத்தி மத்தவங்களுக்கு விளக்க அதை பத்தி படிச்சேன்.. 'அதெப்படி வட்டி இல்லாம வியாபாரம் சாத்தியம்'ன்னு கேக்குறவங்களுக்கு விளக்கவே இன்னும் நிறைய இஸ்லாத்தை பத்தி தெரிஞ்சிகிட்டேன்...<br />
<br />
இப்படி நேரடியா கேள்வி கேட்டவங்க ஒரு பக்கம்னா, வலைத்தளங்களில் இஸ்லாத்தை பத்திய விமர்சனங்களை படிச்சு அதை தெளிவு படுத்திக்க நான் இஸ்லாத்தை இன்னும் அதிகமா கத்துக்கிட்டேன்..<br />
<br />
<br />
இப்படி இறைநம்பிக்கை என்பது இறைவன் ஒருவனேங்குற கோட்பாடுல தொடங்கி, நாம் வாழும் வழிமுறைகள் இறைத்தூதர் முஹம்மது நபி சல் அவர்கள் வாழ்ந்த்த அடிப்படையில் என்பது வரைக்கும் என்னுடைய நம்பிக்கை ஆழமா வளர்ந்துட்டே இருக்கு.. பொறுமையும், மன்னிக்கும் மனமும் நம் வாழ்க்கையை எவ்வளவு எளிதாக்கிடும்கிறது குரானை படிச்சா விளங்கும்.. கொஞ்சம் யோசிச்சு பார்த்தா என்னதான் மனிதன் எப்பேர்ப்பட்ட சாதனைகளை செய்திருந்தாலும் ஒரு அளவுக்கு மேல சில விஷங்கள் நம்ம கையில் இல்லை.. இதை உணர்ந்தவங்க பொறுமையோட இருப்பாங்க, உணராதவங்க நிம்மதியை தொலைச்சிடுவாங்க.. <br />
<br />
படிக்கும் காலங்களில் விளையாட்டுப்போக்கா இருந்தாலும், இறைநம்பிக்கை எனக்கு என்றும் உறுதியாக இருந்திருக்கு, இறைவனின் அருளால்.. ஈமான் என்னும் இறைநம்பிக்கை எனக்கு வாழ்க்கைய ரொம்ப எளிதா ஓட்ட்க்கத்துக்கொடுத்திருக்கு.. <br />
<br />
<br />
அல்ஹம்துலில்லாஹ்! எல்லா புகழும் இறைவனுக்கே!!<br />
<br />
<br />
****நாஸியாhttp://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.com33tag:blogger.com,1999:blog-3353519773626294757.post-87403280290739609702010-03-04T00:01:00.000-08:002010-06-13T21:32:30.709-07:00பதின்ம கால கொசுவர்த்தி!*ரொம்ப பெரிய கொசுவர்த்தியா இருக்கேன்னு ஓடிடாதீங்க*<br />
<br />
மறுபடியும் தீபா அவர்களின் அழைப்பின் பேரில் ஒரு பதிவு.. ரொம்ப சந்தோஷமா இருக்கு,.<br />
<br />
<br />
எங்க பள்ளியில உள்ள விடுதியில சில வெளிநாட்டு பிள்ளங்க படிச்சாங்க. முக்கியமா தாய்லாந்து, சிங்கப்பூர், இலங்கை, என்.ஆர்.ஐ பசங்கன்னு ஒரு ரேஞ்சா இருக்கும். தாய்லாந்து புள்ளங்கல்லாம் ரொம்ப கோவக்கார புள்ளைங்களாவும் இருப்பாங்க. நாங்கல்லாம் கொஞ்சம் தள்ளியே இருப்போம்.. அதுல ஒருத்தி தான் நூர்ஜஹான் (அது அவளோட இஸ்லாமிய பேர்.. தாய்லாந்து பேர் மனஸக்குல் சிரிலெர்ட்)..எப்படியோ நானும், நஸ் ரீன்னு இன்னொரு தோழியும் நூர்ஜஹானும் நெருங்கிய தோழிகளாயிட்டோம்.. <br />
நான் பதின்ம வயதில் அடியெடுத்து வைத்த பதிமூணாவது பிறந்த நாளை மறக்கவே முடியாது.. ஏன்னா நூர் எனக்கு குடுத்த வாழ்த்து அட்டை. அது அவளே தன் கையால செஞ்சது. ஒரு கருப்பு சார்ட் பேப்பரையும், வெள்ளை தாளையும் ஜிகினா பேனாவும், ஒரு சின்ன நூலைக்கொண்டும் ரொம்ப அழகா செஞ்சிருப்பா.. அது வரைக்கும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்ன்னு யாரும் இல்லாத எனக்கு, அந்த அட்டைய பார்த்தும் இவதான் என் பெஸ்ட் ஃப்ரெண்டுன்னு நான் அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்லை..இப்ப நினைச்சாலும் இனிமையா இருக்கு.. அந்த அட்டையும் பத்திரமா இருக்கு.. :)<br />
<br />
அப்ப எங்க பள்ளியில புதுசா ஃபவுன்டன் பெப்சி வெச்சிருந்தாங்க. சின்ன கப் அஞ்சு ரூபா, பெருசு பத்து ரூபா.. நம்மகிட்டல்லாம் ஏது அவ்வளவு காசு.. ஆனா பெப்சிய பார்த்தாலே வாய் ஊரும்.. நாங்கல்லாம் ஒண்ணா சேர்ந்து காசு போட்டு ஒரு பெப்சிய வாங்கி மாத்தி மாத்தி குடிப்போம். அதுக்கே எப்படா ப்ரேக் வரும்னு காத்துகிட்டு இருப்போம். பெப்சி மோகம் போலவே அந்த வயசில ஆங்கிலப்பாடல்கள் கேக்குறது ரொம்ப 'கூலா'னா விஷயமா இருந்துச்சு.. அப்ப வந்த பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ், அக்வாவின் பார்பி கேர்ள் பாட்டெல்லாம் மனப்பாடம் பண்ணி முணுமுணுக்குறது பெரிய விஷயம்.. நமெக்கெங்க அந்த அமெரிக்கன் இங்கிலீஷ் புரியப்போகுது.. நூர்ஜஹான் தான் கேசட் கவர்ல இருந்து பாட்டோட வரிகள் எல்லாம் சொல்லித்தருவா.. <br />
<br />
அதுக்கப்புறம் பத்தாவதுன்னு படிப்புல கொஞ்சம் கவனமா இருக்கனும்னு அப்படி, இப்படின்னு போயிட்டு..பதினோராம் வகுப்பில என் தோழிகள் அறிவியல் பிரிவுல சேர, வணிகவியல்ல சேர்ந்தேன். அப்போ விடுதியில தங்கும் இன்னும் ரெண்டு பேர்: ஃபரா, ஃபரீனா எனக்கு நெருக்கமானாங்க. <br />
<br />
தோழிகள் நாங்க இடைவேளையப்போ ஒண்ணா சேர்ந்துக்குவோம். ஒரு பத்து நிமிஷம் கேப் கிடைச்சாலும் நாங்க அடிக்கிற லூட்டிக்கு அளவே இருக்காது. பல அட்வென்சர்களை நிகழ்த்தியதும் அப்பதான். வீட்டுல இருந்து வர்ற டே ஸ்காலர்கள் எல்லாம் விடுதிக்குள்ள போக கூடாது. ஆனா நாங்க ஸ்போர்ட்ஸ் ப்ராக்டீஸ் நடக்கும் சமயத்துல நைசா போயி தோழிமாரோட ஒண்ணா அரட்டை அடிக்க ஆரம்பிச்சுடுவோம்.. அப்ப திடீர்னு வார்டன் வரவும் நாங்கல்லாம் பயந்துட்டு கட்டிலுக்கடியில ஒளிஞ்சதெல்லாம் நினைச்சா சிரிப்பா வருது.. <br />
<br />
அப்புறம் மூணாரு, மறு வருஷம் ஊட்டி, பொள்ளாச்சின்னு ரொம்ப இனிமையா கழிஞ்சது பள்ளி நாட்கள்..பன்னிரெண்டாம் வகுப்பு முடியும்போது எங்க கேண்டீன் ஸ்பெஷலான சிக்கன் பிரியாணி மூணு வாங்கி, ஒரு நேரத்துல ஒண்ண மட்டும் திறந்து நான், நூர், நஸ் பேரும ஒண்ணா சாப்பிட்டோம்..இனி இவங்கள எல்லாம் எப்ப பார்க்க போறோம்னு ரொம்ப கஷ்டத்தோடவே பிரிஞ்சு போனோம்.. <br />
<br />
நஸ் ரீன் வண்டலூரில, நூர் ஊட்டி, ஃபரா சிங்கப்பூர், ஃபரீனா நாகர்கோயில், நான் அதே ஊருலயும் இப்படி ஆளுக்கு ஒரு பக்கமா போயிட்டோம். <br />
<br />
பள்ளி நாட்கள்ல பேச்சுப்போட்டி, நாடகம்னு சுத்திட்டு இருந்த நான் கல்லூரியில முதன்முதலா வீதி நாடகங்கள் மேல ஒரு ஈர்ப்பு வந்துச்சு.. முதல் வருஷம் போபால் கேஸ் ட்ராஜடி பத்தி தலைப்பு.. நாங்க பயங்கரமா சொதப்பினாலும் மத்த டிபார்ட்மென்ட்ல உள்ளவங்க பண்றதை பாத்து அசந்து போயிட்டேன்.. அதுவும் அந்த தலைப்ப பத்தி இன்னும் படிக்க தோணிச்சு, அமெரிக்க ஆதிக்கம் மேல முதன்முதல்ல கோவம் வர ஆரம்பிச்சுது.<br />
பிறகு ஈராக் போர். இனி அமெரிக்க பொருட்களையே பாவிக்க கூடாதுன்னு முடிவெடுத்து ரொம்ப முனைப்பா இருந்தேன்.. முக்கியமா பெப்சி, கோக்.. முற்றிலுமாக முடியலன்னாலும் முடிஞ்ச அளவு கடைப்பிடிச்சேன்.. மறு வருஷம் வீதி நாடக போட்டிக்கு தலைப்பே அப்ப பரபரப்பா இருந்த பெப்சி, கோக் பூச்சிக்கொல்லி மருந்து மேட்டர் தான்.. கிடைச்சுதுடா அல்வான்னு, நானே ஸ்க்ரிப்ட் எழுதி, முதல் வருஷம் சேர்ந்த பொண்ணோட உதவியோட அசத்தலா ஒரு நாடகம் போட்டோம்.. கிடைச்சது முதல் பரிசு.. ஏற்கெனவே பள்ளியில நாடகம் எழுதின அனுபவம் இருந்தாலும் எங்க கல்லூரியில போட்டிங்கறது சாதரணம் கிடையாது.. ரொம்ப சந்தோஷமா இருந்த தருணங்கள் அது..<br />
<br />
மறு வருஷம் வீதி நாடகங்களை ப்ரஃபஷனலா செய்றவங்களோட பயிற்ச்சி எடுத்துட்டு மீண்டும் முதல் பரிசு வாங்கினோம்.. எங்க டீம் ரொம்பவும் பிரபலமடைய, சென்னையில் உள்ள பல கல்லூரிகள்ல நாங்க போட்டிகள்ல கலந்துட்டு முதல் பரிசுகளா வாங்கி குவிச்சோம்.. அதுல முக்கியமானது, ஐஐடி சென்னையில நடந்த்த 'சாரங்' அப்போ.. சமூகத்துல நடக்குற அவலங்கள்னு பல விஷயங்கள கலவையா சொன்னோம்.. கிட்டத்தட்ட கல்லும் முள்ளுமா இருந்த தரையில போட்டிய வெச்சாங்க.. பதினைந்து நிமிடங்கள் என்ன நடந்ததுன்னே தெரியாம நாடகத்தை முடிச்சோம்.. கைத்தட்டல்கள்ல, கால் வலி தெரியல..போட்டிக்கு நடுவரா வந்தவர் வீதி நாடகங்களுக்கு குருவான முத்துசாமி ஐயா.. கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்காத முதல் பரிசு.. அந்த வெற்றிய நினைச்சா எதையோ பெரிசா சாதிச்ச திருப்தி இன்னும் இருக்கு.. <br />
சத்யம், ஸ்பென்சர்னு சுத்தினாலும் எங்க கவனமெல்லாம் போட்டிகள்ல தான் அதிகமா இருந்ததை நினைச்சா ஆச்சரியமா இருக்கு.. சினிமாவுல வர்ற மாதிரி எங்க டிபார்ட்மென்ட்டுக்கும் பிகாம் டிபார்ட்மென்டுக்கும் ஆகவே ஆகாது.. இதுல பல வருஷங்களா அவங்க வாங்கிட்டு இருந்த கல்ச்சுரல் ஷீல்டை நான் செக்ரடரியா இருக்கும்போது எங்க டிபார்ட்மென்ட் வாங்கினதுல செம்ம கடுப்பா இருந்தாங்க..எப்ப பார்த்தாலும் ஒரு கோல்ட் வார் இருந்துட்டே இருக்கும்.. :))<br />
<br />
எப்படியோ கல்லூரி படிப்பு முடிஞ்சுது, நமக்கு 19 வயசாயிட்டு, நாம இப்ப ஒரு டிகிரி ஹோல்டர்ங்கற எண்ணத்தோட கல்லூரியில அடியெடுத்து வெச்சா...என் நினைப்புல எல்லாம் மண்! என்னால ஹாஸ்டல் வாழ்க்கையும், அங்குள்ள கஷடமான பாடத்திட்டங்களையும் சகிச்சுக்கவே முடியல.. எப்ப பார்த்தாலும் ஒரே அழுகை தான்.. அங்க பல பேர் பொறியியல் படிப்பும் கூடவே வேலை பார்த்த அனுபவத்தோடும் தான் வருவாங்க.. அப்போ என்னை ஆற்தல் படுத்த பல தோழிகள் சொன்னது ஒரே விஷ்யம் தான்: "உனக்கு வயசு பத்தாது!!"...<br />
<br />
<br />
என்ன பண்ண, நமக்கெப்போதும் குழந்தை மனசு தான்.. :))<br />
<br />
<br />
நான் இந்த பதிவை தொடர அழைப்பது சகோதரி மலீக்கா & ஜலீலாநாஸியாhttp://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.com27tag:blogger.com,1999:blog-3353519773626294757.post-49113027217164976342010-01-31T06:54:00.000-08:002010-01-31T06:54:19.356-08:00கொலைசெய்றபட்டினம்!<a href="http://deepaneha.blogspot.com/2010/01/blog-post_28.html">தீபா</a> அவங்க சின்ன வயசில ஏமாந்த கதைய ரொம்ப அழகா சொல்லி இருந்தாங்க. அதை படிச்ச உடனே எனக்கும் கொசுவத்தி சுத்த ஆரம்பிச்சிட்டு.. <br />
<br />
<br />
அப்படியே ஒரு பதினைஞ்சு வருஷம் பின்னாடி போனா என்னுடைய அஞ்சாம் வகுப்பறை தெரியும். அப்போ தமிழ் வகுப்பு, நாங்க தான் ஏ செக்ஷனுக்கு போகனும். எப்பவும் போல மிஸ் ஏதோ சொல்லிட்டு இருக்க, நானும் அவளும் கதை அடிச்சிட்டு இருந்தோம். அப்போ நான் அவகிட்ட 'ஏய் உங்க ஊரு பேரு என்னடி'ன்னு கேட்டதுக்கு 'கொலசேரபட்டினம்'ன்னு சொன்னா. எங்கும்மா ஊரு பக்கத்து ஊருதானே அதனால கேள்விப்பட்டிருக்கேன்னு சொன்னேன். அதோட நிக்காம 'ஆமா ஏன்டி உங்க ஊரு பேரு கொலசேரபட்டினம்'?ன்னு கேட்டேன். அப்போ அவ ஒரு பெரிய கதைய சொல்ல ஆராம்பிச்சா.. "அடியேய் உனக்கு தெரியாதா டீ, எங்க ஊருல, அந்த காலத்துல தடியா, சுருட்ட முடியும், பெரிய மீசையும் வெச்ச ஒரு ஆளு கையில அருவாளோட வரவங்க போறவங்களையெல்லாம் வெட்டி கொலை செஞ்சிட்டே இருந்தானாம், அதனாலத்தான் எங்க ஊருக்கு கொலசெய்றபட்டினம்ன்னு பேரு வந்துச்சு".<br />
<br />
நானும் நம்ம தமிழ் சினிமாவுல வர்ற வில்லன் கணக்கா ஒரு உருவத்த கற்பனை பண்ணி (எக்ஸ்ட்ராவா கன்னத்துல ஒரு மச்சம் வேற) ரொம்ப பயந்த்துட்டு இருந்தேன்.. ஒரு நாள் ரொம்ப ஆர்வம் தாங்க முடியாம எங்கும்மாகிட்ட போயி "ம்மா அந்த கொலைசெய்றபட்னத்துல இருந்த கொலைகாரன நீங்க பார்த்திருக்கீங்களாம்மா"ன்னு கேட்டேன்.. உடனே எங்கும்மா "அட போலா நீ வேற எவளோ சும்மா சொல்லிருக்கா"ன்னு சொல்லிட்டு போயிட்டாங்க. மறுநாள் ஸ்கூலுக்கு போயி "ஏன்டி எங்கிட்ட பொய் சொன்ன"ன்னு கேட்டதுக்க்கு கேவலமா என்ன பார்த்து ஒரு சிரிப்பு சிரிச்சா பாருங்க.. <br />
<br />
இப்ப நாங்க பேசினாலும் அதைப்பத்தி சிரிச்சுக்குவோம். <br />
<br />
<br />
அந்த ஊரோட பேர் குலசேகரப்பட்டினம். :)<br />
<br />
***<br />
<br />
<br />
எங்க அப்பாக்கு (தந்தையின் தந்தை) பித்தளைக்கடை வியாபாரம். மத்த பொருளுங்களோட சேர்த்து சில நேரங்கள்ல பித்தளையில செஞ்ச அழகான பூ ஜாடி, அலங்காரப்பொருட்கள் எல்லாம் வரும். அப்படி நான் முதல் வகுப்பு படிக்கும்போது பித்தளையில சொப்பு சாமானும் வந்த்துச்சு. எங்க அப்பா எனக்கு என் மாமி மகளுக்கும் கொடுத்து விளையாட சொன்னாங்க. மாமி மக என்ன விட அஞ்சு வயசு பெரியவங்க. அவங்களே எல்லாத்தையும் எடுத்து வெச்சுப்பாங்க. ஆனா விளையாடும்போது சேர்ந்து விளையாடுவோம். ஒரு நாள் அவங்க எப்பவும் போல எடுத்துட்டு போயிட்டாங்க. 'மச்சி, அந்த சொப்பு எங்க மச்சி'ன்னு கேட்டப்ப சுவற காமிச்சு 'பாத்தியா இந்த சுவத்துக்குள்ள தான் நான் அதை ஒளிச்சு வெச்சிருக்கேன். அப்புறமா எடுத்து தர்றேன்"னு போய்ட்டாங்க. அந்த சுவற்றையே எத்தனையோ நாள் ஆசையா பார்த்து பார்த்து எப்படித்தான் அதை மறந்து போனேன்னே தெரியல. ஆனா அந்த சொப்பை இன்னொரு தடவை பாக்க முடியுமாங்கற ஏக்கம் மட்டும் இன்னும் போகவெ இல்லை. <br />
<br />
****நாஸியாhttp://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.com30tag:blogger.com,1999:blog-3353519773626294757.post-18127392242096093532010-01-27T23:25:00.000-08:002010-01-27T23:25:13.628-08:00ஹலோ ப்ளீஸ் உங்க வேலைய மட்டும் பாருங்க...அட ஒரு மாசம் ஆகப்போகுதா பதிவெழுதி? நாள் எப்படித்தான் ஒடுதுன்னே தெரியலப்பா...!<br />
<br />
<br />
பதிவுலகில் நடக்கும் காமெடியை முன்னிட்டு ஆண்களின் உரிமைக்காக குரல் கொடுக்க களத்தில் குதித்திருக்கும் சகோதரி ஹூசைனம்மாவை பாராட்டி ஒரு சட்டி பிரியாணி அனுப்பி வைக்கப்படும். <br />
<br />
அதே மாதிரி ஆண்களை அடிமைப்படுத்துற சர்ச்சைக்குரிய விஷங்களான கோட்டு சூட்டு, டைய பத்தி எல்லாம் கூட எழுதினா அவங்களுக்கும் பிரியாணி சட்டி அனுப்பி வைக்கப்படும்.. <br />
<br />
<br />
***<br />
<br />
நாம பாட்டுக்கு நம்ம வழியில போயிக்கிட்டு இருக்கும்போது பெண் சுதந்திரம் பேசுறேன் பேர்வழின்னு வெட்டியா எழுதுறத நினைச்சா சிரிப்பு தான் வருது.. இவங்களுக்கெல்லாம் விளக்கம் சொல்லி மாளாது.<a href="http://rudhrantamil.blogspot.com/2009/12/blog-post_532.html"> </a><br />
<br />
<br />
ஒவ்வொருத்தருக்கும் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில சில முன்னுரிமைகள் இருக்கும் (ப்ரையோரிட்டீஸ்). அது தாங்கள் பின்பற்றுகிற மார்க்கமாக இருக்கலாம், இல்லை ஒரு கொள்கையாக அல்லது லட்சியமாக அல்லது இது எல்லாமே கலந்ததாக கூட இருக்கலாம். அடுத்தவங்க சகிப்புத்தன்மைய சோதிக்காத வகையில இருக்குற வரைக்கும் நலம். <br />
<br />
ஏன் என்ன மாதிரி ஒரு சில பேருக்கு தங்களுக்கு பிடித்த வேலையை மட்டுமே கேரியராக எடுத்துக்க பிடிக்கும். எனக்கு நம்பர்ஸே புடிக்காது. ஆனா நான் ஒரு ஃபைனான்ஸ் ஸ்பெஷலிஸ்ட். எவ்வளவு நாளானாலும் பொறுமையா எனக்கு பிடித்த வேலைய தேர்ந்தெடுத்தேன்.. எனக்கு பிடித்த வேலைய தேர்ந்தெடுக்க எவ்வளவு முனைந்தேனோ அதே அளவு என்னுடைய சில கொள்கைகளை மதிக்கும் நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருந்தேன். <br />
<br />
என்னுடைய ஹிஜாபினால எனக்கு பல நன்மைகள் இருந்தாலும் அதுல முக்கியமானது என்னன்னா நிறைய பேர் என்னை நல்லா நினைவுல வெச்சிருப்பாங்க.. பின்ன க்ளாஸ்லயே ஒரு மண்டை மட்டும் தனியா தெரிஞ்சா அப்படித்தானே ஆகும். அதனால க்ரூப் டிஸ்கஷன்ல எல்லாம் நான் என்ன பேசுறேன் என்பதை அடுத்தவங்களை கவனிக்க வைக்கிறது ரொம்ப சுலபம். அதே போல ஒரு சில விரிவுரையாளர்கள் என்னை ரொம்பவே ஊக்கப்படுத்துவாங்க, நான் படிப்பதை பெருமையாகவும் நினைப்பாங்க. <br />
<br />
நான் கேம்பஸ்ல இன்டெர்வியூ வரைக்கும் போனது இரண்டு நிறுவனங்கள். அதில் முதல்ல போனது பெங்களூரில இருக்கும் ஒரு மென்பொருள் நிறுவனம். சின்ன வயசுல இருந்தே பேச்சுப்போட்டிகள்ல ஆர்வமா கலந்துக்கிட்டதால க்ரூப் டிஸ்கஷன், ப்ரெசென்டேஷன்ல எல்லாம் கொஞ்சம் நல்லாவே பண்ணுவேன்னு நண்பர்கள் சொல்லுவாங்க. அப்படி ஜிடி முடிஞ்சு இன்டர்வியூ போனப்போ அவங்களோட கேள்விகள் முக்கால்வாசி என்னுடைய சமூகத்தை சுத்தி தான் இருந்தது. அந்த நாள் வரைக்கும் போன இடங்களில் எல்லாம் ஊக்கத்தையே பார்த்த நான் கொஞ்சம் டிஸ்கரேஜ் பண்ணுவது போல் இருந்தது. டிஸ்கரேஜுன்னு சொல்வதை விட கொஞ்சம் எரிச்சப்படுத்துவது போலவே இருந்துச்சு. எதிர்ப்பார்த்தது போலவே செலெக்ட் ஆகல. <br />
<br />
அடுத்து போனது ஒரு புகழ்பெற்ற கார்மென்ட் நிறுவனம். அந்த இன்டர்வியூவை என் வாழ்க்கையில மறக்க முடியாது. போன நிறுவனத்துல கேட்ட பல கேள்விகள் என் குடும்பத்தையும், சமூகத்தையும் சார்ந்ததுன்னா இந்த முறை அது மட்டும்தான் கேள்வியே. ஆனா அவங்க கேட்ட விதம் ரொம்ப நல்லா இருந்துச்சு. திரும்ப திரும்ப, "நாஸியா, நாங்க உங்கள மட்டும் தான் நீங்க போட்டிருக்குற உடைய பாத்து கேக்குறோம்னு நினைக்காதீங்க. இதே எங்க முன்னாடி நெத்தி நிறைய பட்டை போட்டுட்டு ஒருத்தர் இருந்தாலும் இதைபோல கேள்விகளை நாங்க நிச்சயமா கேட்டிருப்போம்"ன்னு சொன்னாங்க. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடந்த அந்த இன்டெர்வியூ முடிஞ்ச பிறகு செலக்டான விஷயம் தெரிய வந்தது. நான் கேட்ட லொகேஷன்ல கிடைக்காததால அந்த வேலைய ஏத்துக்க முடியல. <br />
<br />
அதுக்கப்புறம் நம்ம சென்னையிலயே எனக்கு பிடித்த வேலை கிடைச்சது வேற விஷயம். ஆனா இங்க இன்டர்வியூவில முழுக்க முழுக்க ஃபைனான்ஸ் சம்பத்தப்பட்ட கேள்விகள் தான். ஒரு கேஸ் ஸ்டடிய குடுத்து அதை சால்வ் பண்ண சொல்லி அதை சுத்தியே கேள்வி கேட்டாங்க. வேலைல சேர்ந்தப்போ நோன்பு காலம். அப்போ எங்க ஆஃபீஸ்ல நான் ஒருத்தி தான் நோன்பு.. சேர்ந்த முதல் நாளே என்னுடைய பாஸே வந்து நீங்க சீக்கிரம் வீட்டுக்கு கிளம்புங்கன்னு சொல்லிட்டார். அதே போல ஆஃபீஸ் பார்ட்டிகளை எல்லாம் நான் அட்டென்ட் பண்ண இயலாதுன்னு சொல்லும்போது பரவாயில்லை, நாங்க எதுவும் நினைச்சுப்போமோன்னு நீங்க ஃபீல் பண்ணாதீங்கன்னு ரொம்ப ஆறுதலா பேசினார். <br />
<br />
அவர் மட்டும் இல்லை, இது வரைக்கும் நான் கடந்து வந்த இடங்கள் பலவற்றிலும் நான் சந்தித்த மனிதர்கள் பலர் என்னை கண்ணியமாகவே நடத்தினாங்க. அவங்க பார்த்தது என் அறிவை மட்டும்தான். ஒரு பெண்ணாக நான் விரும்பிய படிப்புகளை படிக்க முடிந்தது, நான் விரும்பிய வேலையை செய்ய முடிந்தது: அத்தனையும் என் ஹிஜாபோடு. <br />
இப்ப சொல்லுங்க, நாம இயல்பா அணியுற உடைய வெச்சு இவ்வள்வு பெரிய சர்ச்சைய உண்டு பண்ணனுமா? அப்படி பண்ணுறவங்களுக்கெல்லாம் பதில் சொல்லி மாளாது. ஆனா அமைதியா இருந்தா ஒருவேளை அதெல்லாம் உண்மை போல ஆகிடுமோன்னு தான் இந்த பதிவு..நாஸியாhttp://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.com25tag:blogger.com,1999:blog-3353519773626294757.post-43425049273892272762009-12-27T21:53:00.000-08:002009-12-27T21:53:59.871-08:00பிரியாணி சட்டி: 28.12.2009இங்க வந்து ரெண்டு மாசம் ஆக போகுது.. வீட்ட ரொம்ப தேடினாலும் எனக்கென்னமோ வேற நாட்டுல இருக்குற மாதிரி இல்லை..எங்க பாத்தாலும் நம்ம ஊரு மக்கள்..சேட்டன்மார்கள் நம்ம ஊரு சாமான் ஒண்ணு விடாம இங்க கொண்டு வந்து விக்குறாங்க..எங்க ஆளுக்கு இருமல்ன்னதும் பனங்கற்கண்டு பாலில் காய்ச்சு குடுக்க சொன்னாங்க. கொண்டு வராம இருந்துட்டமேன்னு ரொம்ப ஃபீல் பண்ணினேன். சரி கேட்டுத்தான் பாப்போமேன்னு பாத்தா, அட, கிடைச்சுது!என்ன, நம்ம ஊரு துடைப்பம் இல்லாம தான் ரொம்ப கடுப்பா இருக்கு. அல் ஐனில் இருக்குன்னு சொன்னாங்க.. பாப்போம்!<br />
***<br />
<br />
நாங்க இருக்கும் ஏரியாவில் நம்ம ஊரு மக்கள் ரொம்பவே அதிகம்! அப்படித்தான் ஒரு நாள் நாங்க கடைக்கு போகும்போது ஒருத்தர் ஃபோன்ல தமிழ்ல பேசிட்டே வந்தார். நானும் அப்போ எங்க வீட்டுக்காரர் கிட்ட"ஏங்க, துபாய்ல தமிழாட்கள் ஜாஸ்தில"ன்னு சொல்லிட்டே வந்தேன்.. கொஞ்ச நேரத்தில அந்த ஆள் ஒரே கெட்ட வார்த்தைகளா பேச ஆரம்பிச்சிட்டாரு.. எனக்கு தூக்கி வாரி போட்டுருச்சு.. தெரியாத்தனமா சந்தோசப்பட்டுட்டனோ.. :|<br />
***<br />
<br />
அதே மாதிரி இன்னொரு நாள் நாங்க நடந்து போயிட்டு இருந்தப்போ திடீர்ன்னு ஒருத்தர் பாய்ஞ்சு வந்த மாதிரி வந்து செய்கையால யாசகம் கேட்டார்.. அவர் பாகிஸ்தானி உடை போட்டுட்டு முகத்தையெல்லாம் மூடிட்டு ஒரு மாதிரி இருந்தார். செம்மையா பயந்து, "அல்லாஹு அக்பர்"ன்னு ரோட்லயே கத்திட்டேன்..எங்க வீட்டுக்காரர் இது தான் சான்ஸ்ன்னு பயங்கரமா என்னை ஓட்ட ஆரம்பிச்சுட்டாங்க. :( <br />
<br />
***<br />
<br />
இந்த ஊரில் கூட குப்பை பொறுக்குபவர்களை பார்க்கும்போது ஒரு மாதிரி இருக்கு. எனக்கென்னமோ நம்ம ஊருல குப்பை பொறுக்குறவங்க குறைஞ்சிட்டாங்கன்ற மாதிரி ஒரு நினைப்பு. கடல் கடந்து வந்து இதைத்தான் செய்கிறார்கள் என்று அவங்க உறவினர்களுக்கு தெரிந்தால் வருத்தப்படுவாங்க தானே? எங்க தெருவில் ஒரு வயதான பாகிஸ்தானி பெரியவர் வந்து குப்பையில் இருக்கும் அட்டை, காலி டின்கள் போன்றவற்றை எடுப்பார். ஒரு நாள் பார்த்தா அதில உள்ள பெரிய பெரிய ரொட்டிகளை எடுக்க ஆரம்பிச்சிட்டார்.. எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு..அப்புறம் தான் கேள்விப்பட்டேன் அதெல்லாம் ஒட்டகத்துக்கு போட எடுக்குறாங்கன்னு.. ஏதோ கொஞ்சம் நிம்மதியா இருந்துச்சு.. <br />
<br />
***<br />
ஒரு பக்கம் வேட்டைக்காரன், இன்னொரு பக்கம் கந்தகோட்டை. சன் டிவி சார்ந்த சேனல்களில் வேட்டைக்காரன் தொல்லைன்னா, மத்த எல்லா சேனல்களிலும் கந்தகோட்டை தொல்லை.. தாங்க முடியலை!! பத்தாததற்க்கு இந்த ரியாலிட்டி ஷோக்கள் வேற. என்ன கொடுமை சார்..<br />
<br />
***<br />
சரி நானும் கலவை பதிவு போட ஆரம்பிச்சிட்டேன்! ஒகே ரைட், ரைட்!நாஸியாhttp://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.com35tag:blogger.com,1999:blog-3353519773626294757.post-86928583564432176582009-12-22T23:07:00.000-08:002009-12-22T23:07:06.672-08:00பேனாவும் பேப்பரும்..இருந்தா போதும்..நாமளும் கவிஞர் ஆகிடலாம்.<br />
எப்படின்னு சொல்லுறேன். அதுக்கு முன்னாடி ஒரு சின்ன ஃப்ளேஷ்பேக்.<br />
<br />
நாம பள்ளியில படிக்கும்போது மிஸ் பேச கூடாதுன்னு சொல்லுவாங்க, ஆனா க்ளாஸ் ரொம்ப மொக்கையா இருக்கும். வேற வழியில்லாம புத்தகத்தோட கடைசி பக்கத்துல எழுதி தோழிமாரோட பேசிட்டு இருப்போம் இல்லையா? எனக்கு இந்த கிறுக்குற பழக்கம் ரொம்பவே அதிகம். ஆனா ஸ்கூல்ல கடைசி நாலு வருஷம் நான் கொஞ்சம் 'படிக்கனும்'ங்கற 'பொறுப்புணர்ச்சி'யால அப்படி அவ்வளவா எழுதல.<br />
<br />
<br />
காலேஜ் வந்த பிறகு முதல் வருசம் வெறும் மூணு மணி நேரம்தான் வகுப்புகள்.. அப்போவும் கொஞ்ச ஆர்வக்கோளாருல மேம் சொல்லுறத கவனிச்சிட்டு இருந்தேன். ஆனா கடைசி ரெண்டு வருஷம் முழுக்க படிப்ப தவிர காலேஜ்ல என்னன்ன பண்ண முடியுமோ அத்தனையும் பண்ணிட்டு இருந்தேன் (அதாங்க, எக்ஸ்ட்ரா கர்ரிகுலர்). அதுவும் ஃபைனல் இயர் சொல்லவே வேண்டாம், என்னை வேற செகரட்டரியா போட்டு, நான் பெர்மிஷன் வாங்கி குடுத்தா மத்தவங்களும் கட்டடிக்கலாம்ங்கற நிலைமை வேற.. அப்புறம் என்னாகும், வருசம் முழுக்க மொத்தம் ஒரே ஒரு நாள்தான் க்ளாஸ்ல இருந்தேன்!<br />
<br />
<br />
இப்படி இருந்த புள்ளைய போய் மேல்படிப்பு படிக்க சொன்னா என்ன பண்ணுவா (ஹி,ஹி, யாரும் சொல்லல, நானா எடுத்த முடிவுதான்!). அங்கயும் போய் கட்டடிக்கலாம்னு நினைச்சிட்டு இருந்த என் நினைப்புல எல்லாம் மண்!<br />
<br />
<br />
விடாம தொடர்ந்து நாலு மணி நேரம் க்ளாஸ் நடக்கும், யாராச்சும் விசிட்டிங் வாத்தியார்கள் வந்துட்டா போதும், இரவு ஒரு மணிக்கு கூட க்ளாஸ வெச்சு கழுத்தறுப்பாங்க. இதுல ஞாயிற்றுக்கிழமை ஆனா போதும், காலைல எட்டுல இருந்து இரவு எட்டு வரைக்கும் ஒரே பாடம் நடக்கும். அப்பல்லாம் எல்லாரும் சீக்கிரமா காலைல சாப்பிட்டுட்டு அவசர அவசரமா முதல் ஆளா க்ளாஸ்க்கு போக பெரும் போட்டியே நடக்கும். ஏன் தெரியுமா? கடைசி வரிசைய புடிக்கிறதுக்கு தான். <br />
<br />
நாங்க எப்பவும் எந்த வரிசையில உட்காரதுன்னு ரொம்ப டெக்னிக்கா யோசிப்போம். முதல் வரிசையும் வேலைக்காவாது, கடைசி வரிசையிலயும் எப்பவும் வாத்தியாரோட கண்ணு இருக்கும். அதனால நடு வரிசையில, சுவரோரமாதான் உட்காருவோம். ஆனா என்ன பிரச்சினைன்னா அது ஏசிக்கு கீழ இருக்குமா, காலைல மெஸ்ல பொங்கல்னா போதும், அப்படியே துக்கம் கண்ண கட்டும். என்ன பண்ணுறது, எல்லாருக்கும் வாய்க்காத பாக்கியம் ஒண்ணு எனக்கு வாய்ச்சிருக்கே, அதாங்க ஸ்கார்ஃப்! அப்படியே ஒரு பக்கம் கண்ணத்துல கையும் இன்னொரு பக்கம் ஸ்கார்ஃப அட்ஜஸ்ட் பண்ணிட்டா போதும்! சார் கண்ணுல படாம தொடர்ந்து ரெண்டு மணி நேரம் தூங்கிருக்கேன்னா பாத்துக்கோங்களேன்!<br />
<br />
<br />
ஒரு சமயம் அதுவும் வேலைக்காவாது.. தூங்கி மாட்டிக்கிட்டா மானம் போய்டும், அதனால ஸ்கூல்ல பண்ணின மாதிரி கடைசி பக்க கிறுக்கல் தான் நம்மை காப்பாத்தும்.. அப்படி ஒருக்க கிறுக்குனதை பத்திரமா வெச்சிருக்கேன், அது உங்களுக்காக, இதொ!! <br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEja2fBl5LnFKH1kuuDy3l-uKgRb1Ed_GXBaO8w79wTO0nhuBQFFd-E0xKTBmzYzOJoz3SaV0bpAJnIgFKm2k5CV1LCOv6WCiefDU0J_YhAJliOE24yXiy5F3UYc5Fkp682EAvWfExEGlvM/s1600-h/untitled.bmp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" ps="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEja2fBl5LnFKH1kuuDy3l-uKgRb1Ed_GXBaO8w79wTO0nhuBQFFd-E0xKTBmzYzOJoz3SaV0bpAJnIgFKm2k5CV1LCOv6WCiefDU0J_YhAJliOE24yXiy5F3UYc5Fkp682EAvWfExEGlvM/s640/untitled.bmp" /></a><br />
</div><br />
யாருக்காச்சும் படிக்க கஷ்டமா இருந்தா, இதோ உங்களுக்காகவே!!<br />
<br />
<br />
<span style="color: red;">விஜய் படம் பேரு திருப்பாச்சி</span><br />
<span style="color: red;"><br />
</span><br />
<span style="color: red;">அதை பாத்து எனக்கு ரொம்ப வெருப்பாச்சி</span><br />
<span style="color: red;"><br />
</span><br />
<span style="color: red;">கீர விக்குற ஆயா பேரு மீனாச்சி</span><br />
<span style="color: red;"><br />
</span><br />
<span style="color: red;">க்ளாஸ விடாம எடுக்குறவங்களுக்கு இல்லையா மனசாட்சி?????</span><br />
<br />
<br />
***<br />
<br />
<span style="color: red;">மயில் போல பொண்ணு ஒண்ணு</span><br />
<span style="color: red;"><br />
</span><br />
<span style="color: red;">உங்க எல்லார் தலையிலயும் மண்ணு</span><br />
****<br />
<br />
<span style="color: #cc0000;">oligopoly, monopoly ங்கறான்,</span><br />
<span style="color: #cc0000;"><br />
</span><br />
<span style="color: #cc0000;">எனக்கு தெரிஞ்சதெல்லாம் மசால போளி, கார போளி தான், </span><br />
<span style="color: #cc0000;"><br />
</span><br />
<span style="color: #cc0000;">இருந்தாலும் தண்ணீர் எடுக்க உதவும் வாளி,</span><br />
<span style="color: #cc0000;"><br />
</span><br />
<span style="color: #cc0000;">கிணத்துல தண்ணி எல்லாம் காலி,</span><br />
<span style="color: #cc0000;"><br />
</span><br />
<span style="color: #cc0000;">க்ளாஸ் இல்லைன்னு சொன்னா எங்களுக்கெல்லாம் ஜாலி</span><br />
<br />
*****நாஸியாhttp://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.com28tag:blogger.com,1999:blog-3353519773626294757.post-91899516968806666922009-12-21T00:45:00.000-08:002009-12-21T00:49:28.765-08:00கடனும் வட்டியும் அது போடும் குட்டியும்பரக்கத்!<br />
<br />
தமிழை தாய் மொழியாகக்கொண்ட பல முஸ்லிம்கள் பேச்சு வழக்கில் சில அரபி வார்த்தைகளை கலந்து பாவிப்பதுண்டு. ஹயாத்து (வாழ்வு), மவுத்து (இறப்பு), ரிஸ்க் (உணவு), ராஹத்து (இதம்), நஸீப் (இறைவன் விதித்தது) போன்றவைகளுள் ஒன்றுதான் பரக்கத். பரக்கத் என்றால் பலர் நிறைய பண வரவு மட்டுமே என்று தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். பரக்கத் என்பது இறைவனின் அருளால் தன்னிறைவு பெறுதல். அதாவது ஒருத்தர் மாசம் ஒரு லட்சம் சம்பாதிச்சாலும் ரெண்டு லட்சத்துக்கு கிரடிட் கார்டை தேய்ச்சு செலவு செய்கிறவங்களும் இருக்காங்க,அதே போல ஆயிரம் ரூபாயே வருமானம் என்றாலும் அந்த ஆயிரத்துக்குள் குடும்பம் நடத்தி, அதில் கொஞசமாச்சும் மிச்சம் பிடிக்கும் ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் இல்லையா? <br />
<br />
<br />
முன்னெல்லாம் நாம கடனாளியா இருக்கறத யாருமே விரும்ப மாட்டோம். எப்படி நமக்கு ஒரு உடல் உபாதை வரக்கூடாதுன்னு நினைப்போமோ அப்படித்தான் கடனாளியாகவும் ஆகக்கூடாதுன்னு நினைப்பொம் இல்லையா?<br />
ஆனா ஒரு ஏழெட்டு வருஷமா என்ன நடக்குது? உலகமயமாக்கல்ன்ற பேர்ல கோக கோல, பெப்சியோட சேர்ந்து வந்த்து தான் இந்த க்ரெடிட் கார்டும். இரண்டு வருசம் முன்னாடி வரைக்கும் நம்ம நாட்டோட பொருளாதாரம் (அதுலயும் எனக்கு உடன்பாடில்லை. நாட்டோட வளர்ச்சி என்பது எல்லா மக்களையும் சேர்ந்தடையும் சமமான வளர்ச்சியாக இருக்கனுமே ஒழிய ஒரு சாரார் மட்டுமே வளர்ச்சியின் பயன்களை அனுபவிப்பது ஏற்க முடியாது) தாறுமாறா வளருதுன்னு பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் கூவிக்கிட்டு இருந்தப்போ பத்துல எட்டு பேருக்காச்சும் சார் தயவு செய்து லோன் வாங்கிக்கோங்கன்னு கெஞ்சோ கெஞ்சுன்னு போன் கால்கள் வந்திருக்கும் (அது இப்பவும் தொடரத்தான் செய்யுது). உசாரானவங்க தப்பிச்சிருப்பாங்க. ஆனா பல பேர் "சும்மா வரத ஏன் வேண்டாம்னு சொல்லனும்", "நாம என்ன தேய்க்கவா போறோம், சும்மா வாங்கி வெச்சுப்போமே", "இப்ப வாங்கி வெச்சுட்டா ஏதாச்சும் அவசரத்துக்கு உதவும்". பெர்சனல் லோன் மற்றும் கார்டை வெச்சிருப்பவங்க பெரும்பாலும் இந்த காரணங்கள்ல ஏதாச்சும் ஒண்ண தான் சொல்லுவாங்க, இல்லையா?<br />
<br />
இப்படி வரைமுறை இல்லாம கடன் குடுக்குறதும், கடன் வாங்குறதும் அமெரிக்க கலாச்சாரம். அங்க சேமிப்புங்கறது ஒரு கான்சப்டே இல்லை, அது தனி மனிதனாக இருந்தாலும் சரி, அரசாங்கமா இருந்தாலும் சரி. இன்னும் சொல்ல போனா நாங்க எம்.பி.ஏ வுல படிச்ச நிதி நிர்வாகம் சம்பத்தப்பட்ட சப்ஜக்டுகள்ல உள்ள அமெரிக்கன் தியரிஸ்டுகளெல்லாம் கடன் வாங்குறதால ஒரு கம்பெனியின் நிகர லாபம் (net profit) கூடும் என்ற எம் & எம் தியரி தான் நாங்கல்லாம் முட்டி மோதி படிச்சிட்டு இருந்தோம் (சிம்பிளா சொல்லனும்னா, கடன்ல கட்ட வேண்டிய வட்டி தொகை வருமான வரிக்கு உட்படாது, அதனால ஒரு பங்குக்குரிய லாபத்தொகை அதிகமாகுமாம்.. ஏதோ தலையை சுத்தி மூக்கை தொடுவது போல இல்ல?<br />
<br />
எப்பவுமே கடன் என்பது ஒரு அவசரத்தேவைக்காக, நம்மிடம் இருப்பது போக வாங்குவதாகத்தான் இருக்கணுமே ஒழிய எளிதா கிடைக்குதேன்னு வாங்கி போடக்கூடாது. இது ஒரு தனி மனிதனுக்கும் மட்டுமல்லாமல் அரசுக்கும், நிறுவனங்களுக்கும் கூட பொருந்தும். உலக பணக்காரர்களில் முதல் இரண்டு இடங்கள்ல இடம் வகிக்கும் வாரன் பஃபெட் கூட அதிகமா கடன் பட்டிருக்கிற நிறுவனங்கள நாட மாட்டாரு. <br />
<br />
உங்கள்ல எத்தனை பேருக்கு தெரியும்னு எனக்கு தெரியாது, ஆனா இஸ்லாத்தை பொறுத்தவரை வட்டி வாங்குவது என்பது கொலைக்குற்றத்துக்கு சமம். வட்டி வாங்குபவர் இறைவனுடனும் நபியுடனும் போர் செய்கிறார் என்றே குரானில் இறைவன் கூறுகிறான்.<br />
<br />
<br />
<strong>ஈமான் கொண்டோரை! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக்கொண்டால்) வெற்றியடைவீர்கள். (3:130) </strong><br />
<strong><br />
</strong><br />
<strong>ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையான மூஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டுவிடுங்கள். (2:278)</strong><br />
<br />
<br />
<strong>இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது. நீங்கள் தவ்பா (இப்பாவத்திலிருந்து) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல்-முதல் உங்களுக்குண்டு. (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள்- நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (2:279)</strong><br />
<br />
<br />
அப்ப நாம கடன குடுத்துட்டு என்ன செய்றதாம்? அவனுக்கு கடன் குடுக்காம நான் ஒரு தொழிலில் முதலீடு செய்திருந்தாலோ அல்லது ஒரு வீடு கட்டியிருந்தாலோ அது மூலமா எனக்கு வருமானம் வந்திருக்கும். இன்னைக்கு நூறு ரூபாய்க்கு இருக்குற மதிப்பு ஒரு வருஷம் கழிச்சு கண்டிப்பா அதுக்கும் குறைவாதான் இருக்கும் (அதாவது டைம் வேல்யூ ஆஃப் மனி). அப்படி இருக்கும்போது நான் வட்டி கேக்குறது எப்படி அநியாயமாகும்? நான் கடன் கொடுத்ததால இழந்த பணத்தை (ஆப்புர்ட்யூனிட்டி காஸ்ட்) ஈடு செய்யத்தானே கேக்குறேன்? என்ற "நியாயமான" காரணங்களை பலர் எடுத்து வைப்பதை நான் கேட்டிருக்கிறேன். இன்னும் பலர் வட்டின்னா அது மீட்டர் வட்டி, கந்து வட்டி தான், சாதரணமா வங்கிகள் சேமிப்பு மீது கொடுக்கும் வட்டி நியாயமானது தான் என்று கூறுவார்கள். <br />
<br />
நாம முன்ன கடன் எதுக்கு வாங்குறோம்கிற அடிப்படையை பாத்தோம். இஸ்லாத்துல கடன் கொடுப்பது என்பது தர்மம் செய்வது போல.. கஷ்டத்தில் இருக்கும் ஒருவருக்கு கடன் கொடுத்து, அவருக்கு முடியாத பட்சத்தில அந்த கடனை தள்ளுபடி செய்வது மிகவும் நன்மைக்குரிய விசயமாக கருதப்படுகிறது. அதே போல கடன் வாங்கியவர் நல்ல நிலமையில் இருந்தால் அவர் வாங்கியதை விட அவர் இஷ்டத்திற்கு அதை சிறப்பாக திருப்பி கொடுக்கலாம். நினைவில் கொள்க: கடன் கொடுத்தவர் அதை ஒருபோதும் கட்டாயப்படுத்த முடியாது. <br />
<br />
எப்படி வட்டியின் மூலம் பணம் சம்பாதிப்பது அனுமதிக்கப்படலயோ அதே போலத்தான் ஸ்பெகுலேசன் எனப்படும் நிச்சயமற்ற தன்மை உடைய வியாபாரத்தில் ஈடுபடுவதும் அனுமதிக்கப்படல. ஆனா பங்கு வர்ததகத்தை வர்த்தகத்துல ரொம்ப சாதரணமா நடக்குது- டே ட்ரேடிங்: ஒரே நாளில் பங்கை வாங்கி விற்பது, ஆப்ஷன்ஸ்: இன்னைக்கு ஒரு பங்குகுக்கு ஒரு விலை நிர்ணயம் பண்ணிட்டு அதை ஆறு மாசம் கழிச்சு விலை குறைஞ்சா வாங்குவது எல்லாமே சூதாட்டத்தை போலத்தான். இரண்டு வருசம் முன்ன ஒரே நாளில் சென்செக்ஸ் பல ஆயிரம் புள்ளிகளை தாண்டுவதும், கொஞ்ச நாளைல அது அதல பாதாளத்தை தொடுவதற்க்கு காரணம் இது தான். பல வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் இந்த விளையாட்டை விளையாட நம்ம நாட்ட பயன்படுத்தியது வேற கதை!<br />
<br />
இன்றைய காலக்கட்டங்கள்ல வட்டியும், ஒண்ணுமில்லாத அடிப்படையில் பங்கு சந்தையில் பணம் ஈட்டுவதும் ஒரு நாட்டுடைய பொருளாதார அடிப்படையை எந்த அளவுக்கு ஆட்டி வைக்குதுன்னு அமெரிக்கா என்னும் ஒரு நாடு மூலமாகவே பார்க்கிறோம். <br />
மத்த விஷயங்களை போலவே பண விஷயத்திலும் அதிகபட்ச ஒழுக்கத்தை கடைப்பிடிக்கிறது எவ்வளவு நன்மைங்கிறது எனக்கு ஒரளவுக்கு தெரியுது.. உங்களுக்கு?<br />
<br />
டிஸ்கி: அமெரிக்க பொருளாதரத்தை பத்தி மார்க் ஃபேபர் என்னும் முதலீட்டாளர் என்ன சொல்றார்னு பாக்கனுமா? <a href="http://economictimes.indiatimes.com/Play-contrarian-buy-Japanese-stocks-Marc-Faber/articleshow/5356262.cms">இதை படிங்க</a>, ரொம்ப சுவையா இருக்கும்!நாஸியாhttp://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.com44tag:blogger.com,1999:blog-3353519773626294757.post-91217616840441821112009-12-17T00:08:00.001-08:002009-12-17T00:08:38.910-08:00கம்மா..ஒரு வாரமா ஒரே கவலை.. என்னுடைய கம்மாவுக்கு (அம்மாவை பெத்த பாட்டி) பைபாஸ் அறுவை சிகிச்சைன்னு சொன்னவுடன் எனக்கு இங்க கொஞ்சம் கூட ஓடவேயில்லை..எனக்கு முதல்ல கல்யாணம் பண்ணனும்னு வீட்டுல பேசினப்ப நான் முதல்ல போட்ட கண்டிசன் வெளிநாடு போக மாட்டேன்னு தான்.. ஏர்க்கெனெவே ரெண்டு வருசம் ஹாஸ்டல்ல இருந்து வீட்ட ரொம்ப தேடிட்டேன், இனியும் ம்மா வாப்பாவை விட்டுட்டு இருக்க முடியாது, அப்புறம் முக்கியமா ஊருல நடக்குற நல்லது கெட்டதுக்கு கலந்துக்க முடியாதுங்கறதால அந்த கண்டிசன். <br />
<br />
ஆனா இறைவன் நமக்கு ஒரு நல்ல வாழ்ககையை வெளிநாட்டில் தான் வெச்சிருக்கான் என்றால் நாம் அதை ஏற்றுக்க தானே செய்யனும்னு வந்தாச்சு (அவங்க கல்யாணத்துக்கு அப்புறம் லீவு முடிஞ்சு முதல்ல இங்க வந்ததும் எப்படா விசா வரும்னு காத்துட்டு இருந்தது தனி கதை. என் தம்பி கேட்டான் "எப்படி லாத்தா இப்படி தலகீழா மாறிட்ட). கிளம்பும்போதே கம்மாக்கு தாடை வலிக்குதுன்னு சொன்ன உடன் ரொம்ப கவலையா இருந்தது. முதல்ல டாக்டரை போய் பாருங்கன்னு சொன்னேன்..உங்க எல்லாருக்கும் இதய நோய் சம்பத்தப்பட்ட மின்னஞ்சல் வந்திருக்கும்னு நினைக்குறேன்.. அதுல தெளிவா போட்டிருக்கும், தாடை வலிச்சா அது இதய நோய் அறிகுறியா இருக்கும் என்று. நீங்களும் உங்க வீட்டுல உள்ள பெரியவங்ககிட்ட சொல்லி வைங்க. <br />
<br />
கம்மாக்கு அறுவை சிகிச்சை நல்லபடியா முடிஞ்சது, அல்ஹம்துலில்லாஹ். இப்போ ஐ சி யூவில தான் இருக்காங்க. இன்ஷா அல்லாஹ் நாளைக்கோ நாள கழிச்சோ ரூமுக்கு மாத்திடுவாங்க. <br />
<br />
எங்க ம்மா வீட்டுல நான்தான் முதல் பேத்தி. நான் பிறந்தப்போ நடந்த கதைகளையும், கொஞ்சம் வளர்ந்து பேச ஆரம்பிச்சப்போ நான் பண்ணின குறும்புகளையும் கொஞ்சம் கூட மறக்காமல் எங்க கம்மா சொல்லுவாங்க.. இன்னனும் சின்ன புள்ளைல என் அளவுக்கு எந்த பேத்தியும் பேசினதில்லைன்னு சொல்லுவாங்க.. (ரைமெஸ் சொல்ல சொன்னா, "ஹாப் அ லிட்டில், ஜம்ப் அ லிட்டில்" என்று ஆரம்பிச்சி, "ரன் அ லிட்டில்"ன்னு சொல்லி அப்படியே விளையாட ஓடிடுவேனாம்). ஸ்கூல் படிக்கும்போது எப்படா லீவு விடுவாங்கன்னு வெயிட் பண்ணி கம்மா வீட்டுக்கு போவேன்.. போனா கம்மா சுட்ட முறுக்கு ஒரு பெரிய டின் முழுக்க காத்துட்டு இருக்கும். அந்த ருசி வேறெந்த முறுக்குலயும் வாரதுங்க, உண்மையா.. அங்க என்னை இடுக்கிட்டு பஜார்க்கு கூட்டிட்டு போவாங்க (அப்பவே நடக்க சோம்பப்பட்ட தில்லாலங்கடி நான்).<br />
<br />
எனக்கு அங்கிருந்து வீட்டுக்கு வரவே புடிக்காது. எரிச்சப்பட்டுட்டே தான் கிளம்புவேன்..கம்மாகிட்ட நான் இங்கயே இருந்துக்குறேன் கம்மா, இங்குள்ள ஸ்கூல்லயே படிக்கிறேன்னு சொல்லுவேன்.. நான் தூங்கும்போது எனக்காக லா இலாஹா இல்லல்லாஹ்வும் தாலாட்டும் பாடுவாங்க. அந்த பாட்டோட வரிகள் எனக்கு நினைவில்லன்டாலும் அந்த ராகம் எனக்கு நல்ல நினைவிருக்கு.<br />
<br />
<br />
அதுக்கப்புறம் அவங்க சென்னை வந்த பிறகும் கம்மா வீட்டுக்கு போறதுன்டாலே ஜாலிதான்.. ஆனா கல்லூரிக்கு வந்த பிறகு நாட்கணக்கில தங்குறது குறஞ்சிட்டு..அப்புறம் எம்.பி.ஏ படிக்க திருச்சி போன பிறகு ம்மாவை ரொம்ப தேடி கல்யாணம் வரைக்கும் அவங்கள பிரிஞ்சி இருக்க மனமே இல்லை.<br />
<br />
இப்பொ கம்மா நினைப்பு ரொம்ப வாட்டுது. அவங்களுக்கு முடியாத நேரத்துல அவங்க பக்கதுல இருக்க முடியலன்னு நினைக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு. என்னை எப்படியெல்லாம் வளர்த்தவங்க அவங்கள பாக்க முடியலன்னு நினைச்சா வருத்தம் தாங்க முடியல. சரி என்னாலானது என்னுடைய துவா (பிரார்த்தனை) மட்டும்தான். இப்போ என் தம்பி வந்தப்போ கூட அவன்கிட்ட அவங்க செஞ்ச முறுக்கும் இட்லி பொடியும் குடுத்து விட்டுருக்காங்க. எனக்கு எப்படா அவங்கள பாப்போம்னு இருக்கு..நாஸியாhttp://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.com22tag:blogger.com,1999:blog-3353519773626294757.post-8866710717704549022009-12-07T05:56:00.000-08:002009-12-07T05:56:17.465-08:00அளவுக்கு மிஞ்சினால்...மக்களே..எல்லாரும் நல்லா இருக்கீங்களா? பார்த்து ரொம்ப நாளாச்சே.. என்ன பண்ணுறது? முதலில் வலைத்தளம் ஒண்ணு தொடங்கனும் என்று நினைத்த உடனே, துபை வந்து, செட்டில் ஆனதும் தொடங்கலாம்னு தான் நினைச்சேன்..ஆனா ஆசை யார விட்டுச்சு, ஆர்வக்கோளாறுல ஆரம்பிச்சாச்சு, ஆனா தொடர்ந்து எழுத தான் இயலல.. இன்னைக்கு ஹூசைனம்மா ரொம்ப அன்பா மெயில்ல விசாரிச்சாங்க.. அட, இனிமேலும் எழுதாம இருக்க கூடாதுன்னு வீராப்பா பழயபடி வந்த்தாச்சு..<br />
<br />
<br />
தக்கடி போட்டதுக்காக எனக்கு விருது கொடுத்து சிறப்பித்த சகோதரர் பித்தனின் வாக்கு அவர்களுக்கும், சகோதரி சாதிகா அவர்களுக்கும் நன்றி, நன்றி, நன்றி (எனக்கு சோடா பாட்டிலும், மைக்கும் நினைவுக்கு வருது..உங்களுக்கு?)<br />
<br />
நமக்கு முன்ன பின்ன சொந்தமா சமைச்சு பழக்கமில்லாத்தால, பல நேரங்கள்ல செம்ம சொதப்பல்ஸ் ஆஃப் யு.ஏ.இ ஆகிடுது.. நேத்து ஒரு சேமியா செஞ்சேனே பார்க்கனும், எனக்கு உண்மயாகவே அவுங்கள கொடுமை படுத்துற மாதிரி ஒரு ஃபீலிங்.<br />
<br />
அப்புறம் நம்ம நண்பர்கள் தொல்லை வேற தாங்க முடியல.. "ஏன்டி, நீதான் துபை வேர்ல்டுக்கு அட்வைஸ் கொடுத்தியா"ன்னு கேட்டு ஒரே தொல்லை..ஆனா துபை வேர்ல்ட விட, அதுக்கு கடன் கொடுத பிரிடிஷ் வங்கிகளுக்கு அட்வைஸ் கொடுத்தவன தான் முதல்ல உதைக்கனும்..சாதரணமா ஒரு அம்பது ரூபா ஒருத்தவங்களுக்கு கடன் கொடுக்கனும்னாலே ஆயிரம் தடவை யோசிக்குற மனுசன், அதெப்படி ஒரு நிறுவனம் அரசு சார்பானதுன்னு என்ற ஒரு விசயத்த மட்டும் வெச்சிட்டு, ஆயிரம் ஆயிரமா கோடிகளைகொட்டி கொடுக்குறாங்க? <br />
<br />
துபை வேர்ல்ட்டுக்கும், அதனுடைய துணை நிறுவனமான நகீலுக்கும் (அதாங்க, கடல்ல பேரிச்ச மரத்த போல தீவுகளை கட்டி, அதுல ஹோடெல்களும், வீடுகளும் கட்டி விக்குறாங்களே) கண்ண மூடிட்டு, அதனுடைய ஆடிட் செய்யப்பட்ட கணக்கு வழக்குகளை எல்லாம் பார்க்காம எப்படித்தான் இவ்வளவு கொட்டி கொடுத்தாங்களோ.. <br />
<br />
எப்படியோ, கொஞ்ச நாளைக்கு மீடியாக்களுக்கு நல்ல தீனி தான்.. எப்படியும் அவங்க இன்னும் கடன தர மாட்டேன்னு சொல்லல, ஆறு மாசம் ஆரப்போடத்தான் சொல்லிருக்காங்க.. அபு தாபியும் உதவிக்கரம் நீட்டுது, பாப்போமே, என்ன தான் நடக்க போகுதுன்னு.ஒரு வேளை கடன அடைக்காம விட்டுட்டா, உலக அளவுல பெருசா பாதிப்பில்லைன்டாலும் இங்க கண்டிப்பா ஒரு க்ரெடிட் க்ரன்ச் (வங்கிகள் கடன் மூலமா இருக்கும் பணப்புழக்கம்) நடக்கும்னு நான் நினைக்குறேன்.. <br />
<br />
இவ்வளவு குளறுபடிகளுக்கும் காரணம், காசு தான் எளிதா கிடைக்குதேன்னு கண்டதையும் செய்றது.. இதை நாம தனிப்பட்ட முறையிலயும் செய்யுறோம், ஒரு கூட்டா பெரிய நிறுவனங்களும் செய்யுது..எப்பவுமே நம்ம தேவைக்கு மீறி எதை செய்தாலும், அதிலும் ஒரு வரைமுறை இருக்கனும்.. காசு இருக்கேன்னு ஊர சுத்தலாம், ஆனா கடனுக்கு வாங்கி சுத்தனுமா என்ன? இது ஒரு இடத்தோட இருக்காது, ரிப்பிள் எஃப்க்ட் என சொல்லப்படும் அது சார்ந்த அதிர்வுகள ஏர்படுத்திட்டே தான் இருக்கும்.. <br />
கடனை பற்றியும், வட்டியை பற்றியும், வியாபாரத்தை பற்றியும் இஸ்லாம் என்ன சொல்லுத்துன்னு பார்த்தா ரொம்ப ஆச்சர்யமா இருக்கு..ஒரு நிதி நிர்வாக துறையை சேர்ந்த எனக்கு புரிஞ்சத கூடிய சீக்கிரம் உங்களிடமும் பகிர்ந்துக்கறேன்..நாஸியாhttp://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-3353519773626294757.post-58820265813569580972009-11-26T03:02:00.000-08:002009-11-26T03:02:58.150-08:00ஐ! இன்னொரு விருது!!இந்த பக்கம் வந்தே ரொம்ப நாளாச்சே.. மேட்டர் என்னன்னா, எனக்கு கூகிள பயன்படுத்தியே பழக்கமாயிட்டதால மற்ற தமிழ் எழுதிகளை பயன்படுத்துறது கொஞ்சம் கஷ்டமா இருக்கு..அன்பு சகோதரிகள் ஜலீலாவும் ஹுஸைனம்மாவும் சொன்ன தமிழ் எடிட்டரை வைத்து தான் எழுதுறேன்..<br />
<br />
முதல்ல எனக்கு விருது குடுத்த சகோதரி மேனகாவுக்கு ஒரு பெரிய சைஸ் நன்றி.. ஹி ஹி.. என்னோட மொக்கைக்கும் விருது குடுக்குறாங்கன்னா அது ரொம்ப பெரிய விஷயம்.. ரொம்ப நன்றி, சகோதரி!! :)<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZ_hGBGIb_N6OYGYN-CgrP9HzY4gE9yNql4E9XEGB3YigVFmRTwh8z9InymifXPs5YIpc1e2-69CJ0Xcb-8RKY1Gp4kfkpN1o9inyM72YhEAPYRox4gHFyDGnLn86hagMX3gRgc1YoLcw/s1600/4126597255_9e8ab5796d_o.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZ_hGBGIb_N6OYGYN-CgrP9HzY4gE9yNql4E9XEGB3YigVFmRTwh8z9InymifXPs5YIpc1e2-69CJ0Xcb-8RKY1Gp4kfkpN1o9inyM72YhEAPYRox4gHFyDGnLn86hagMX3gRgc1YoLcw/s320/4126597255_9e8ab5796d_o.jpg" yr="true" /></a><br />
</div><br />
<br />
நாளைக்கு இன்ஷா அல்லாஹ் பெருநாள்...இன்னைக்கு அரஃபாத் நோன்பு.. அவுங்களுக்கு இன்னைக்கும் ஆஃபீஸ்.தனியாத்தான் நோன்பு திறக்கனும்.. ஹ்ம்ம்ம்..இப்ப வீட்டு நினைப்பு ரொம்ப வாட்டுது..வீட்டுல பெருநாள் வந்துட்டாலே,முதல்ல துணி, மணியெல்லாம் வேங்கிட்டு, அவசர அவசரமா தைக்க குடுத்துட்டு, அத வேங்க போகும்போது மருதாணி வேங்கிட்டு, வீட்டுக்கு வந்தா சாச்சிமார் எல்லாருக்கும் மருதாணி விட்டுட்டு, கதை பேசிட்டே இருக்கும்போது தூக்கம் கண்ண கட்டும், ஆனா தூங்க மனசு வராது.. <br />
<br />
<br />
சென்னையில எங்க வீடு இருக்குற இடம் நல்ல கல, கலன்னு இருக்கும். நல்ல மார்கெட் ஏரியா..பெருநாளப்போ தெருவே களை கட்டிடும்.. எங்க வீட்டுல இருந்து கூடுதலா ஃப்ளட் லைட்டெல்லாம் போடுவாங்க.. அதை பார்க்கவே அழகா இருக்கும்.. நானும் என் தம்பியும் இன்னும் சாச்சா புள்ளைங்க்ளும் சேர்ந்து மொட்டை மாடிக்கும் வீட்டுக்குமா அலைஞ்சிட்டு இருப்போம்..ம்மா, சாச்சிமார், வாப்சா எல்லாரும் முற்றத்துல உட்கார்ந்து இஞ்சி, பூண்டு உரிச்சிட்டு இருப்பாங்க.. மேல மாடியில பிரியாணி ஆக்க ஆட்க்ள் எல்லாம் வந்துகிட்டு இருப்பாங்க.. அப்போ அந்த சட்டிய பார்க்கவே ஆசையா இருக்கும்.. கொஞ்சம் நேரஞ்சென்டு போனா, ஸ்வீட் செஞ்த தருவாங்க.. ஹ்ம்ம்ம்..<br />
எனக்கு பெருநாள் அன்னைக்கு செய்ற பிரியாணிய விட, காலைல பசியாற செய்யும் இட்லி, கறி உருளைக்கிழங்கு ஆனம், வட்டலப்பம், பாயாசம் தான் புடிக்குமே.. பெருநாள் தொழுகை முடிஞ்சதும் நல்லா ஒரு புடி, புடிக்கலாம்..கையில மருதாணி வாசத்தோட சாப்ட்றதே ஒரு தனி சுகம் தான்.. :)<br />
<br />
ஹ்ம்ம்...சரி ரொம்ப சென்டியாகிட்டேன்.. பரவால்ல. இங்க பெருநாள் கொண்டாட அவுங்க சொந்த காரவங்க வீட்டுக்கு போறோம், இன்ஷா அல்லாஹ்.. :) கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் இது தான் முதல் பெருநாள்.. :) ஆவலுடன் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.. <br />
<br />
<br />
<br />
எல்லாருக்கும் ஹஜ்ஜு பெருநாள் நல்வாழ்த்துக்கள்.. இறைவனின் அருட்கொடையை எண்ணி, அவனுக்கு நன்றி செலுத்தி, சிறப்பாக கொண்டாடுவோம்..நாஸியாhttp://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-3353519773626294757.post-12428069549990775842009-11-13T04:04:00.000-08:002009-11-13T04:08:38.686-08:00ஒரு விருது, ஒரு தட்டு தக்கடி<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjufvPo9wH-lVNS5cuWy5DhgW27nrudh0xxsUve4cpom19tKbIbhpnexCON_VKux9rZb1MbaGZUzsmuBm6YoJo988TfN6X9EMwiJ7IPMizFHrkMe0CQISMYTvt72R-bemez5J8I5OKHuuQ/s1600-h/interest.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" sr="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjufvPo9wH-lVNS5cuWy5DhgW27nrudh0xxsUve4cpom19tKbIbhpnexCON_VKux9rZb1MbaGZUzsmuBm6YoJo988TfN6X9EMwiJ7IPMizFHrkMe0CQISMYTvt72R-bemez5J8I5OKHuuQ/s320/interest.jpg" /></a><br />
</div><br />
நம்ம ஜலீலா லாத்தா ஒரு விருது குடுத்துருக்காங்க.. அபப்டியே புல்லரிச்சு போயிட்டேன்.. பின்ன நாம எழுதுற மொக்கைக்கு அவார்டெல்லாம் குடுக்குராங்கப்பன்னு தான்.. இருந்தாலும் ரொம்ப உற்சாகமா இருக்கு.... நன்றி லாத்தா.. <br />
எங்க ஊரு பக்கம் (அதான் நெல்லை சீமை- அருவாக்கும் அல்வாக்கும் பெயர் பெற்ற ஊரு!) பல உணவு பண்டங்கள் அரிசிய வெச்சு செய்வாங்க.. நிறைய பேருக்கு முஸ்லிமுன்னு சொன்னாலே பிரியாணி தான் நினைவுக்கு வரும்.. ஆனா சத்யமா எங்க வீட்டுல பிரியாணி செய்ய தெரிஞ்சவங்கள விரல் விட்டு எண்ணிடலாம்... எங்கும்மாக்கு சுத்தமா வரவே செய்யாது.. என் தம்பி சொல்லுவான் "ம்மா, நீ எது வேணும்னாலும் செய், ஆனா டிவி ல கண்டதையும் பாத்துட்டு பிரியாணி மட்டும் செய்யாதம்ம்மா"... அந்த அளவுக்கு தான் பிரியாணி.. ஆனா என்ன, பெருநாள், கல்யாண நேரங்கள்ல வெளிய ஆள் வெச்சு ஆக்கிட வேண்டியது தான்.. :)<br />
<br />
நெய்சோறு, கரி ஆனம், வட்டலப்பம், இடியப்பம், ஆப்பம், புட்டு, அரிசிமா ரொட்டி, தக்கடி, வெள்ளை கஞ்சி இதெல்லாம் எங்க ஊர்ல ரொம்ப விசேஷம். .. எனக்கிதுல பிடிச்சது தக்கடி.. <br />
<br />
டைப் பண்ணும்போதே வாய் ஊறுதுங்க.. எனக்கு அவ்வளவு புடிக்கும்... ஆனா கொஞ்சம் செயற்முறை கஷ்டமா இருக்குற மாதிரி இருக்கும்.. என்கும்மா எது செஞ்சாலும் ரொம்ப எளிதா செஞ்சிடுவாங்க.. அதுல ஒன்னு தான் இந்த சாப்பாடும்.. <br />
நான் செஞ்ச தக்கடி:<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUnXB4lSzaoDGlJG5xM_ywtb09E4wlvEsrHnSBlQUUvwsq38xji8-KhMDmQ587XWDZHQHgbGkh5PY1bjkP6dZLqajVXlSvm7T6SNghOA5JXO1lUbfZC4JjeRZSZhsmGXKFNuzeFimgYYY/s1600-h/DSC01530.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" sr="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUnXB4lSzaoDGlJG5xM_ywtb09E4wlvEsrHnSBlQUUvwsq38xji8-KhMDmQ587XWDZHQHgbGkh5PY1bjkP6dZLqajVXlSvm7T6SNghOA5JXO1lUbfZC4JjeRZSZhsmGXKFNuzeFimgYYY/s320/DSC01530.JPG" /></a><br />
</div><br />
<br />
செய்முறை (யப்பா... கடைசில நானும் சமையல் பதிவெல்லாம் போடுறேன் பா!)<br />
<br />
தேவையான பொருட்கள்:<br />
<br />
தக்கடிக்கு<br />
<br />
- தேங்காய் துருவி போட்ட அரிசி மாவு- இரண்டு கப்<br />
<br />
-பொடியாக அறிந்த வெங்காயம் சிறிதளவு<br />
<br />
-பச்சை மிளகாய் சிறிதளவு<br />
<br />
-உப்பு, தேவைக்கேற்ப<br />
<br />
லேசா சுடுதண்ணிய தெளிச்சு சின்ன சின்னதா கொழுக்கட்டை புடிச்சி வெச்சுக்கோங்க. <br />
<br />
ஆனத்திற்கு: <br />
<br />
-இரண்டு தக்காளி<br />
<br />
-மூன்று அல்லது நான்கு பெரிய வெங்காயம்<br />
<br />
-பச்சை மிளகாய் சிறிதளவு (நறுக்கியது)<br />
<br />
-இஞ்சி பூண்டு விழுது தேவையான அளவு<br />
<br />
-மிளகாய், மல்லி, உப்பு தூள்- தேவையான அளவு<br />
<br />
-ஆட்டிறைச்சி அரை கிலோ <br />
<br />
எண்ணெய் காய்ஞ்சதும் இஞ்சி பூண்டு போட்டு வதக்கி, நறுக்கிய வெங்காயம் போட்டு அது வதங்கியதும் தக்காளியை சேத்துக்கோங்க.. அதுல எல்லா மசாலா தூளையும், உப்பையும் போட்டு, நல்ல வதங்குன பிறகு கறிய போட்டு நல்ல தண்ணி ஊத்தி குக்கரை மூடி, அஞ்சு விசில் வர வரைக்கும் வைங்க.. <br />
<br />
குக்கரை திறந்து, கறி வெந்துட்டான்னு பாத்துக்கோங்க. ஆனம் கொஞ்சம் தண்ணியா இருக்கணும்.. அதுல ஒவ்வொன்னா புடிச்சு வெச்ச தக்கடிய போடுங்க.. ஆனம் அதுல நல்லா இறங்கினதும் அப்படியே கெட்டியாகிடும்.. ஐயோ எனக்கு வாய் ஊறுதுங்க.. நான் எஸ்கேப்நாஸியாhttp://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.com22tag:blogger.com,1999:blog-3353519773626294757.post-16982049121953263452009-11-07T02:27:00.000-08:002009-11-07T02:31:03.299-08:00அரபி காரங்க மண்டையும், அதுல உள்ள கொண்டையும்..அதாவது என்னன்னா, மேடம் இப்பல்லாம் ரொம்ப பிஸி மாதிரி.. இல்லத்தரசி இல்லையா? சமைக்கணும் இல்லையா? எல்லாரும் கேக்குறாங்க 'how was your cooking experience?' அப்படின்னு.. எனக்கு தானே தெரியும் அது experience இல்லை, experiment என்று! ஹிஹி... பாவம் எங்க வீட்டுல உள்ளவங்கதான்.. போன வாரம் ஒரு சொதப்பல் ரசம் வெச்சு அவங்களுக்கு கட்டி குடுத்துட்டேன்... பாவம் அவங்க அலுவலகத்துல கிட்டத்தட்ட மானம் போய்ட்டாம் (ஆனா பாருங்க, ரசம் மட்டும் தான் சொதப்பல், மத்த இதெல்லாம் நல்லா தான் செய்றேன்னு சொன்னாங்களாக்கும் ;) )<br />
<br />
<span style="font-size: small;">துபைக்கு கெளம்பறேன்னு எல்லார்கிட்டயும் பயணம் சொல்லும்போது, சொல்லி வெச்ச மாதிரி எல்லாரும் கேட்ட கேள்வி: "துபாய் ல எங்க, மெயின் ரோட்டுக்கு பக்கத்துலயா? பஸ் ஸ்டாண்ட ஒட்டியா?". இங்க வந்ததுல இருந்து துபாய் பஸ் ஸ்டாண்ட் எங்க இருக்குன்னு பாக்க ரொம்ப ஆவலா இருந்தது, நேத்துதான் காண கிடைச்சுது.. நேத்து தெரிஞ்சவங்க ஒருத்தவங்க வீட்டுக்கு ஷார்ஜாவுக்கு போனோம், அங்க அவங்க வீடு உண்மையாவே கொஞ்சம் பஸ் ஸ்டாண்டுக்கும், மெயின் ரோடு (அதாங்க அந்த பெரிய பிரிட்ஜ்) பக்கத்துல தான் இருந்துச்சு! :)</span><br />
<br />
துபாய் வந்து சேர்ந்த உடன கண்ணை ஸ்கேன் பண்ண வரிசைல நிண்டுட்டு இருந்தேன்... அரபிகாரங்களை தொலைக்காட்சியில பார்த்தாலும் நேர்ல பாக்குறது அது தான் முதல் தடவைன்னு நினைக்கிறேன்.. அவங்க தலைல இருந்த அந்த கருப்பு வட்டத்தை பார்த்ததும் எனக்கு எங்க வீட்டுல இருக்குற கலவடை நினைவுக்கு வந்துட்டு (அதான் அடுப்புல இருந்து இறக்கி வைக்க ஒரு ரிங் இருக்குமே, அது).. உடனே அவர் தலைல ஒரு சட்டிய வைச்சா எப்படி இருக்கும்னு நினைச்சிட்டு இருக்கும்போதே என் முறை வந்துட்டு.. போனா 'ஆங்கொன் , தேகோ' ன்னு ஏதோ ஹிந்தியில சொல்றார்.. நமக்கு தான் ஹிந்தி வரதே, நான் சொன்னேன், 'i don't understand hindi', அப்புறம் அவர் கேட்டார் 'you're from India, you don't know Hindi?', அடுக்கு நான் 'no, I speak Tamil' அப்படின்னு சொன்னேன். அடுத்த கேள்வி தான் காமெடியே, அவரு "then what language you know" அப்படின்னு கேட்டப்போ எனக்கு வந்துச்சு பாருங்க, மனசுக்குள்ள "அடப்பாவி மனுசா, இவ்வளவு நேரம் எதுல பேசிட்டு இருந்தேனாம்னு நினைச்சிட்டே, English please" ன்னு சொல்லி தப்பிச்சேன்!<br />
<br />
சரி இங்க உள்ள அரபி பொண்ணுங்களுக்கும் தலை ரொம்ப வித்தியாசமா தான் இருக்குதுங்க.. ஆமா... தலைல ஏதோ ஸ்டாண்ட் அடிச்சு அதை சுத்தி துணிய போட்டுருக்குற மாதிரி இருக்கு... அது தான் இப்ப பேஷன் போல... <span style="font-size: small;">ரொம்ப இருக்கமா உடை அணிஞ்சிட்டு பேருக்கு சும்மா தலைல துணிய சுத்தி இருக்காங்க.. என்னமோ... மேலை நாடுகள்ல ஹிஜாபை கடைபிடிக்க சாலைல வந்து போராட வேண்டி இருக்கு... இங்கு இவ்வளவு சுதந்திரம் இருந்தும் இப்படி இருக்குறாங்க.. அவங்க எங்க, இவங்க எங்க! </span><br />
<br />
<span style="font-size: small;">அல்லாஹ் தான் எல்லா மக்களையும் காப்பாத்தனும்.. </span>நாஸியாhttp://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.com35tag:blogger.com,1999:blog-3353519773626294757.post-33094963404336150122009-11-04T23:35:00.000-08:002009-11-04T23:35:22.738-08:00பிடித்தவர்/பிடிக்காதவர்ஒரு வழியா துபாய் வந்து சேர்ந்தாச்சு.. தனியா சமைக்கவும் பழகியாச்சு (சரி, சரி..என்ன செய்ய, எங்க வீட்ல உள்ளவங்க தல விதி அவ்வளவு தான்).. இப்ப பிரியாணி கடையையும் திறந்தாச்சு.. <br />
<br />
<a href="http://jaihindpuram.blogspot.com/">பீர் அண்ணே</a> தொடர் விளையாட்டுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.. ரொம்ப நன்றி! ஹிஹி.. சரி ரொம்ப பேசாம விஷயத்துக்கு வாரேன்:<br />
<br />
<span>1. அரசியல் தலைவர்</span><br />
<br />
<br />
பிடித்தவர்: ஜெயலலிதா<br />
<br />
பிடிக்காதவர்: கலைஞர் (ஆட்டோ வருமோன்னு பயம்மா இருக்கு பா)<br />
<br />
2. எழுத்தாளர்<br />
<br />
பிடித்தவர்: கல்கி (பொன்னியின் செல்வன்!!!!!)<br />
<br />
பிடிக்காதவர்: மதன்<br />
<br />
3. கவிஞர்<br />
<br />
பிடித்தவர்: தாமரை<br />
<br />
பிடிக்காதவர்: பா. விஜய் (கேவலமான<br />
குத்து பாடல்களுக்காக)<br />
<br />
4. திரைப்பட இயக்குனர்<br />
<br />
பிடித்தவர்: பாண்டியராஜன் (ஆண் பாவம் ஒரு படம் போதும்)<br />
<br />
பிடிக்காதவர்: கே. பாலசந்தர் <br />
<br />
5. நடிகர்/கை<br />
<br />
பிடித்தவர்: பத்மினி <br />
<br />
பிடிக்காதவர்: விஜய் <br />
<br />
6. விளையாட்டு வீரர்<br />
<br />
பிடித்தவர்: விசுவநாதன் ஆனந்த்<br />
<br />
பிடிக்காதவர்: ஜோஷ்னா சின்னப்பா<br />
<br />
7. தொழில் அதிபர்<br />
<br />
பிடித்தவர்: சாந்தி துரைசாமி ( சக்தி மசாலா)<br />
<br />
பிடிக்காதவர்: ராஜகோபால் (சரவணபவன்)<br />
<br />
கேள்வின்னு வந்தாலே எல்லாமே மறந்து போகுது.. விளையாட்டின் விதிகள் <a href="http://mathavaraj.blogspot.com/2009/10/blog-post_31.html">இங்கே</a>. <br />
<br />
நான் அழைக்க விரும்புவது: <br />
<span></span> <br />
<span>1. <a href="http://vigneshwari.blogspot.com/">விக்னேஸ்வரி</a> </span><br />
<span>2. <a href="http://kalaisaral.blogspot.com/">அன்புடன் மலிக்கா</a> </span><br />
<span></span> <br />
நாஸியாhttp://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-3353519773626294757.post-20150826638980840402009-10-23T11:42:00.001-07:002020-11-08T08:07:41.292-08:00வீராசாமி-The Man of Action!!என்ன முழிக்கிறீங்க? எல்லாரும் எந்திரன் படத்துக்கே விமர்சனம் எழுத தொடங்கிட்டதுக்கு அப்புறம் ரெண்டரை வருடம் முன்ன வந்த வீராசாமிய பத்தி இப்ப எழுத வாரேன்னு தானே?<br />
<br />
அப்படி சாதரணமா விட்டுட முடியுமா? அந்த படத்தையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த நாளையும்? அது எந்த நாளுன்னு கேக்குறிங்களா? அது தான் நாங்க மூணு பேரு திருச்சி ரம்பா ஊர்வசி திரையரங்கத்துல தலைவர் படத்த பார்த்த நாளு!<br />
<br />
ஹ்ம்ம்..நிறைய பேருக்கு நான்னா, TR நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு நான் அவர் ரசிகை.. ஆமாங்க..நம்புங்க.. அவரு படத்துல அவரு உதிர்த்த முத்துக்களை எல்லாம் சேகரிச்சு நிஜ வாழ்கையில பாவிக்கிற ஆளு நான்! எப்படின்னு யோசிக்கிறீங்களா? நல்லா யோசிங்க, அதை அப்புறமா இன்னொரு நாள் பொறுமையா போடுறேன்.. (பின்ன பதிவெழுத மேட்டர் வேணாமா?)<br />
<br />
அப்படிப்பட்ட தலைவர் ரசிகையாகிய நான், அவரு படம் தியேட்டர்ல வரும்போது பார்க்காம சும்மா விடுவேனா?? ரம்பா ஊர்வசியில ஓடுதுன்னு தெரிஞ்சதும் முதல் வேலையா கிளாஸ்ஸ பங்க் பண்ணிட்டு நானும் கோகியும் ஸ்கூட்டிய BHEL ஸ்டாண்ட்ல விட்டுட்டு சத்ரதுக்கு பஸ் ஏறிட்டோம்.. அங்க ஒரு வேலை முடிஞ்சதும் Femina Shopping Mall (ஆமாங்க, அது தான் திருச்சியோட சிட்டி சென்டெர்.. எங்களுக்கு நல்லா பொழுது போகும்) போயிட்டு காயுக்கு போன் அடிச்சோம்.. அவ கெளம்பி வாரேன்னு சொன்னதும், அதுக்குள்ள லஞ்ச் சாப்டுட்டு பஸ் ஸ்டாண்ட்ல அவ வந்ததும் தியேட்டருக்கு நடக்க ஆரம்பிச்சோம்.. போற வழியில டிக்கெட் முன்பதிவு செய்யலையே, ஹவுஸ் புல் ஆகிடுமோன்னு ஒரே கவலை... அட உண்மையத்தாங்க சொல்றேன்..<br />
<br />
அங்க வேர்த்து விறுவிறுத்து ஒரு வழியா போனா டிக்கெட் ஈசியா கிடைச்சிட்டு.. இருந்தாலும் நல்லா கூட்டம்..பின்ன தலைவர் படமாச்சே.. அங்கல்லாம் இங்க மாதிரி டிக்கெட் நம்பர் கிடையாது.. எங்க வேணும்னாலும் உட்காரலாம்.. அப்படி எங்க இருக்கலாம்னு யோசிச்சிட்டு இருந்தப்போ ரெண்டு பேரு பேசிட்டே வாராங்க: "டேய் வடிவேல் படம் பாக்குற மாதிரி ஒரே காமெடியா இருக்கும்டா, டைம் போறதே தெரியாது" ன்னு சொல்லிட்டே அவங்க சீட்ட தேட ஆரம்பிச்சுட்டாங்க.. சரி தலைவருக்கு இவ்வளவு கூட்டம் வருதேன்னு சந்தோஷமா ஸ்டார்டிங் சீன போட்டான் பாருங்க.....<br />
<br />
அப்படி ஒரு சர வெடி..ரவுடி பசங்களெல்லாம் கலாட்டா பண்ண, அவங்கள அடிக்கிறதுக்கு அப்படியே ஒரு குடிசைக்குள்ள இருந்து வர்றார்: அப்படியே வெடிக்குது அந்த குடிசை... அந்த பைட் சீனுக்கு அப்புறம் என்ன இருக்கணும்? சரியா சொன்னா படத்துல அவரு பயன்படுத்தின சீப்பு உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்..<br />
<br />
எல்லாரும் சரியா சொல்லிட்டீங்க.. உங்க வாசகதவ யாராச்சும் தட்டினா குரியர் காரரா இருக்கும். பொய் கையெழுத்து போட்டுட்டு சீப்ப வாங்கிக்கோங்க.<br />
<br />
அந்த தங்கச்சி செண்டிமெண்ட் சீனுல தங்கச்சி ஜீன்ஸ் பேன்ட் வாங்கிக்கேட்டதும் தலைவர் கண்கலங்கி திரும்பி பார்ப்பார் பாருங்க, அதுல தியேட்டரே சும்மா அதிர்ந்துதுங்க... அப்புறம் ஒரு டயலாக் விடுவார் "ஏம்மா, நம்மள வளர்த்தது ஒரு இட்லிகட ஆயா, அதனால நாம ஜீன்ஸ் எல்லாம் போடா கூடாதும்மா".. இப்படி ஒரு சமூக நீதிய நம்ம தலைவர தவிர வேற யாராச்சும் யோசிக்க முடியுமா?<br />
<br />
அப்புறம் படத்தோட ஹீரோயின் மும்தாஸ்.. அவங்களுக்கு ரொம்ப வித்தியாசமான வேடம்னு டைட்டில்ல போட்டாங்க.. என்ன வித்தியாசமான நடிப்பு தெரியுமா அது? மும்தாசுக்கு வில்லனோட கல்யாணம் ஆயிட்டதுக்கு அப்புறம் தலைவர் எப்படிலாமோ பீல் பண்ணுவாரு.. அதுல முக்கியமானது: ஒரு நாள் தலைவர் தாடிய சீவுன சீப்பை அந்தம்மா மறைச்சு வெச்சிகிட்டு விளையாடும், தலைவர் அத புடிங்கிப்பார்.. அப்புறம் அந்த சீப்பா பார்த்து அழுது, பீல் பண்ணி, திரும்பவும் தாடிய சீவிக்குவாரு... என்னமா பீலிங்க்ஸ் ஒப் இந்தியா பாத்திங்களா? By the way, அந்த சீப்பு தான் உங்களுக்கு பார்சல்ல வந்துருக்கும்..<br />
<br />
கதை எப்படி எல்லாமோ போயி, கடைசில சொன்ன வாக்க காப்பத்த முடியலயேன்னு தலைவர் நாற்காலியில உட்கார்ந்த மாதிரியே மண்டைய போட்டுருவாரு.. அவ்வளவு தான் முடிஞ்சுதுன்னு எல்லாரும் எந்திக்க, கொஞ்ச நேரத்துல மும்தாசும் மண்டைய போட்டுருவாங்க..எல்லாரும் அப்படியே சிலிர்த்து, கை தட்ட ஆரம்பிச்சுட்டாங்க.. பின்ன எப்படியாப்பட்ட காவியம் இது!<br />
<br />
மறு நாள் கொல்லெஜுக்கு வந்து எல்லார் கிட்டயும் படத்த பார்த்த பெருமையும், கூடவே 'அகில உலக TR ரசிகர் மன்ற MBA பிரிவு தலைவி' ங்கற பட்டத்தையும் வாங்கிகிட்டு சந்தோஷமா பொழுத கழிச்சேன்!நாஸியாhttp://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.com37tag:blogger.com,1999:blog-3353519773626294757.post-73236037311972607452009-10-15T22:25:00.000-07:002009-10-15T23:11:36.739-07:00MBA படிக்க போறீங்களா?ஏதோ நமக்கு தெரிஞ்சதை பகிர்ந்துக்கலாமேன்னு. இதுல நிறைய விஷயம் உங்களுக்கு ஏற்கெனெவே தெரிஞ்சிருக்கலாம், இருந்தாலும்:<br />
<br />
<div><br />
</div><div><br />
<div><br />
</div></div><strong>MBA </strong>வை பொறுத்த வரைக்கும் இன்ன படிப்பு தான் படிச்சிருக்கனும்னு அவசியம் இல்லை. நீங்க UG எந்த துறைல செய்திருந்தாலும் MBA படிக்கலாம். ஆனா அக்கவுண்ட்ஸ், காமர்ஸ் படிச்சவங்களுக்கு தொடக்கத்துல கொஞ்சம் எளிதா இருக்கிற மாதிரி இருக்கும். அதெல்லாம் முதல் வருஷம் மட்டும் தான், இரண்டாவது வருஷத்துல எல்லாருமே சமமா தான் இருப்பாங்க. <br />
<br />
<div><br />
</div>எந்த கல்லூரியில படிக்கிறதுன்னு முடிவு பண்ண முன்ன, எப்படிப்பட்ட MBA பண்ண போரோம்கிறது முக்கியம். எனக்கு தெரிஞ்சு இந்த படிப்ப நாலு வகையா பிரிக்கலாம்:<br />
<br />
<div><br />
</div><ul><li>CAT, XAT, RAT (ஹிஹி,,, இது சும்மா தமாசுக்கு) எழுதி B-Schools எனப்படும் பெரிய, பை நிறைய சம்பளம் கொடுக்கம் நிறுவனங்கள் வருகை தரும், பல முன்னணி ஏடுகள் தரவரிசை பட்டியலில் இடம்பெறும் IIM, XLRI, போன்ற கல்லூரிகள் </li>
<li> TANCET எழுதி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் இயங்கும் கல்லூரிகளில் சேர்வது (பெரும்பாலும் இன்ஜினியரிங் கல்லூரிகளில்)</li>
<li>All India Management Association (AIMA) நடத்தும் MAT எழுதி அந்த தேர்வை ஏற்கும் சில கல்லூரிகளில் படிப்பது</li>
<li>IGNOU, பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் தொலை தூர கல்வி பயில்வது </li>
<li>ஏற்கெனெவே வேலை செய்பவர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும் ஒரு வருட Executive MBA வகுப்புகள். இதில் ISB- ஹைதராபாத் தான் இந்தியாவிலேயே முதலிடம். இன்னும் ஏன், உலகளவில் அங்கீகாரம் பெற்றதும் கூட. நம் சென்னையிலும் Great Lakes Institute of Management இத்தகைய பட்டத்தை வழங்குகிறது</li>
</ul>மேற்கொண்டு செல்வதற்கு முன் ஒரு விஷயத்தை தெளிவு படுத்திக்கொள்கிறேன்: MBA விற்கும் IIM போன்ற கல்லூரிகள் கொடுக்கும் PGDBM, PGDBA போன்ற பட்டத்திற்கும் ஒரு வித்தியாசம் தான்; பல்கலைக்கழகங்கள் பட்டம் கொடுத்தால் அது MBA, தன்னிச்சையாக ஒரு institute பட்டம் கொடுத்தால் அது <span style="font-size: small;">PGDBA/PGDBM அவ்வளவே. </span><br />
<br />
<span style="font-size: small;">முதலில் நீங்க எந்த மாதிரி MBA படிக்க போறீங்கன்னு முடிவு செஞ்சுக்கோங்க. MBA வை பொறுத்த வரை நீங்க எந்த கல்லூரியில படிக்கிறீங்கன்றது ரொம்ப ரொம்ப முக்கியம். எப்பவும் B School Ranking என்று பல முன்னணி இதழ்கள், AC Nielsen போன்ற சர்வே நிறுவனங்கள் வெளியிடும். அதுல எப்பவும் முதல் இருபது-முப்பது கல்லூரிகளுக்கு நல்ல மதிப்பிருக்கிறது. இருந்தாலும் ஒரு விஷயத்த ஞாபகத்துல வெச்சுக்கோங்க, இது போன்ற தர வரிசையில் கூட நிறைய சர்ச்சைகள் இருக்கு. அதனால எப்பவும் நம்மால முடிஞ்சா நல்ல ஆராய்ச்சி பண்ணின பிறகு தான் எந்த கல்லூரின்னு தேர்ந்தெடுக்கணும். </span><br />
<br />
<span style="font-size: small;">ஒரு வேளை நீங்க CAT, XAT போன்ற தேர்வுகளை எழுதிட்டு, IIMs ல இருந்து அழைப்பு வர காத்துகிட்டு இருக்கலாம். அல்லது நீங்க தேர்ந்தெடுத்த கல்லூரிகள்ல இருந்து அழைப்பு வர காத்துகிட்டு இருக்கலாம். நீங்க இந்த தேர்வு எழுதினத வெச்சிட்டு உங்களுக்கு நிறைய உப்புமா கல்லூரிகள்ல இருந்து தானாகவே அழைப்பு வரலாம். எந்தெந்த கல்லூரிகள்ல சேர ஐடியா இருக்கோ, அதை பத்தி நம்மாலான ஆராய்ச்சிய தொடங்கணும். அது ரொம்ப ரொம்ப முக்கியம். அங்க படிச்ச மாணவர்களிடம் இது போன்ற கேள்விகளை கேட்கலாம்: </span><br />
<br />
<ul><li><span style="font-size: small;"></span> Specialization: MBA வில் கண்டிப்பா நமக்கென்ன துறை பிடிக்குதோ, அந்த துறையில் அந்த கல்லூரி பெயர் பெற்றிருக்கான்னு பார்க்கும். சில கல்லூரிகள்ல சில துறைகளுக்கு மதிப்பே இருக்காது. அங்க நீங்க அந்த துறை எடுத்த, கரை செற்றது கஷ்டமா போய்டும். </li>
<li>Placements: எனக்கு தெரிஞ்சு யாரும் அறிவை வளர்க்குரதுக்கு MBA படிக்கலை. முக்கால்வாசி பேர் தங்களுடைய சம்பள அளவு உயரனும்னு தான் படிக்கிறாங்க. அதனால நீங்க படிக்கச் போற இடத்துல நூறு சதம் placemens இருக்கான்னு பாக்கணும். அதே போல மாணவர்கள் கட்டாயம் எதுவும் இல்லாம தங்களுக்கு பிடித்த நிறுவனங்களுக்கு மட்டும் apply பண்ணும் வசதி இருகான்னும் பாக்கணும்</li>
<li>Faculty: எத்தனை பேர் நிரந்தர விரிவுரையாளர்கள், எத்தனை பேர் அப்பப்போ வரும் visiting faculty என்று பாக்கணும். பொதுவா பெரிய பெரிய பொறுப்புகளள இருக்குற சில பேர் தங்களுடைய ஆர்வம் காரணமாக வந்து சொல்லி கொடுப்பாங்க, அது நம்மளுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும். எந்தெந்த நிறுவனங்கள்ல இருந்து வாரங்கன்றத நாம கண்டிப்பா தெரிஞ்சிகிட்டா நல்லது</li>
<li>Infrastructure: எல்லாம் ஒழுங்க இருந்தா தான் நமக்கும் படிக்கச் வசதியா இருக்கும். விடுதியில இன்டர்நெட் வசதி தங்கு தடையில்லாம வருதா, நாம ஆராய்ச்சி பண்ண வசதியா database களுக்கு சந்தா செளுதியிருகா, போன்றவைகளை கவனிச்சிக்கணும் </li>
</ul>சரி, எல்லாத்தையும் சொல்லி இதையும் சொல்லிடறேன். B School களில் படிச்சா ஒரு பாஸ்போர்ட் மாதிரி, அவ்வளவு தான். அதுக்கப்புறம் ஒவ்வொருதர் உயர்வை அடையறதும் அவரவர் திறமையை பொறுத்தே. எங்களுக்கு சொல்லி கொடுத்தவர்கள்ள, IIM-A ல படிச்சிட்டு வந்து கேவலமா சொல்லி கொடுத்தவங்களும் இருந்தாங்க, நம்ம Madras University ல படிச்சிட்டு சூப்பரா சொல்லி கொடுத்தவங்களும் இருக்காங்க. <br />
<br />
அடுத்த பதிவில் தமிழ் நாட்டில் உள்ள நல்ல கல்லூரிகள், எந்தெந்த துறைய தேர்ந்தெடுப்பதுன்னு பாப்போம்.நாஸியாhttp://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.com20